பெரியாருக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர்!

ஜி.கே.சேகரன்,
சமூக நீதி நாளை முன்னிட்டு வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்ட தந்தை பெரியார் திரு உருவபடத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
தந்தை பெரியார் 145 ஆவது பிறந்த நாள் மற்றும் சமூக நீதி நாளை முன்னிட்டு, வேலூர்மாவட்டம், வேலூர் அண்ணா சாலையில் உள்ள வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வெளியே தந்தை பெரியார் சிலையின் கீழ் பெரியார் திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுதினார்.
இதில் திமுக பொதுச் செயலாளர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,ஜெகத் ரட்சகன், கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் , நந்தகுமார் கைத்தறி துணி நூல் அமைச்சர் காந்தி உட்பட அமைச்சர்கள் கலந்து கொண்டு மரியாதையை செலுத்தினார்கள்.