கண்காணிக்கப்படும் ரவுடிகள்! நெல்லை டிஐஜி அட்வைஸ்!

கண்காணிக்கப்படும் ரவுடிகள்! நெல்லை டிஐஜி அட்வைஸ்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,

 தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறை துணைத் தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப. அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர். சீனிவாசன்  முன்னிலையில் மாவட்டத்திலுள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள்  ஆகியோருக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 இந்த கூட்டத்தில் பல ரகசிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக சமூக விரோதிகளின் செயல்களை முற்றிலும் ஒடுக்குவது, இப்போது இருப்பதைப்போலவே போதை பொருட்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பது, ரவுடிகளை ரகசியமாக கண்காணிப்பது போன்றவற்றுக்காக சில ஆலோசனைகள் அப்போது வழங்கப்பட்டது. 

  பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார் டிஐஜி.