தொழில் முனைவோர் திட்டத்தில் ரூ.4.00 இலட்சம் வரை மானியம் பெற விண்ணப்பம்! ஆட்சியர் தகவல்!

தொழில் முனைவோர் திட்டத்தில் ரூ.4.00 இலட்சம் வரை மானியம் பெற விண்ணப்பம்! ஆட்சியர் தகவல்!

ஆர்.ரமேஷ்,

தமிழ்நாடு  மாநில ஊரக  வாழ்வாதார  இயக்கம் மாவட்ட  இயக்க மேலாண்மை அலகு ௹ திருப்பத்தூர்

திருப்பத்தூர்  மாவட்டத்தில் பசுமை தொழில் முனைவோர் திட்டத்தில் ரூ.4.00 இலட்சம் வரை மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது குறித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

 தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், சுற்றுச் சூழலுக்கு உகந்த பசுமை செயல்பாடுகளை உருவாக்கி இலாபத்துடன் கூடிய உற்பத்தி, விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்திடவும்பொருளாதார ரீதியாக பசுமை தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்திடும் பொருட்டு "பசுமை தொழில் முனைவோர் திட்டம்" உருவாக்கப்பட்டுள்ளது.

 இத்திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் நடத்தப்படும் பசுமை தொழில் நிறுவனங்களை தேர்வு செய்து சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை தொழில் நிறுவனங்கள் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ், தேர்வு செய்யப்படும் தொழில் குறித்து தொழில் முனைவோர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

 மேலும் விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் ஓராண்டிற்கு மேல் தொடந்து செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்.  விண்ணப்பிக்கும் நிறுவனம் கட்டாயம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அங்கீகாரம் மற்றும் GST பதிவு பெற்றிருத்தல் வேண்டும். 

 விண்ணப்பிக்கும் தொழில் நிறுவனம் குறைந்த பட்சம் 3 வேலையாட்களை கொண்ட நிறுவனமாகவும் GEM இணையதளத்தின் மூலம் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

 தேர்வு செய்யப்படும் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் குறைந்த பட்சம் ரூ.4.00 இலட்சம் இருத்தல் வேண்டும்.  உதயம் சான்றிதழ், FSSI, FSSAI, TNPCB, CPE and CPO   சான்று பதிவு செய்து பெற்றிருக்க வேண்டும். 

 மேலும்,  தேர்வு செய்யப்படும் தொழில் நிறுவனங்களுக்கு 4.00 இலட்சம் வீதம் 3 கட்டங்களாக தொழில் வளர்ச்சி நிதியாக வழங்கப்படும்.

நிதி ஆதாரம் பயன்பாடு;

 முதல் ஆறு மாதத்திற்கு 50 சதவீதம்  நிதி ரூ.2.00 இலட்சமும் அடுத்த மூன்று மாதம் 25 சதவீதம் ரூ.1.00 இலட்சம் நிதியும் அடுத்த மூன்று மாதம் 25 சதவீதம் ரூ.1.00 இலட்சம் நிதி என்ற விகிதத்தில் பிரித்து வழங்கடும்.

முதல் தவணை  நிதி பெற தகுதியுடையவர்கள்;

கண்காணிப்பு மற்றும் மதிப்பாய்வு குழுவால் பசுமை தணிக்கையில் 100 சதவீதம் அளவுகோல் பெற்ற நிறுவனம் முதல் நிலை தகுதி பெறும் நிறுவனங்களாக (G1- வெள்ளை ) ௹பரிந்துரைக்கப்படலாம். குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனத்திற்கு 50 சதவீதம்  முதல் தவணை நிதி பெற தகுதியுடையவர்கள்.

இரண்டாம் தவணை  நிதி பெற தகுதியுடையவர்கள்;

கண்காணிப்பு மற்றும் மதிப்பாய்வு குழுவால் பசுமை தணிக்கையில் 75 சதவீதம் அளவுகோல் பெற்ற நிறுவனம் இரண்டாம் நிலை தகுதி பெறும் நிறுவனங்களாக (G2- பச்சை ) ௹பரிந்துரைக்கப்படலாம். குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனத்திற்கு முதல் ஆறு மாத கால முடிவுபெற்றிருக்க வேண்டும்.. இந்நிறுவனம் 25 சதவீதம் இரண்டாம் தவணை நிதி பெற தகுதியுடையவர்கள்.

மூன்றாம் தவணை  நிதி பெற தகுதியுடையவர்கள்;

கண்காணிப்பு மற்றும் மதிப்பாய்வு குழுவால் பசுமை தணிக்கையில் 50 சதவீதம் மற்றும் 50 சதவீதத்திற்கு குறைவான அளவுகோல் பெற்ற நிறுவனம் மூன்றாம் நிலை தகுதி பெறும் நிறுவனங்களாக (G3- ஆரஞ்சு ) ௹பரிந்துரைக்கப்படலாம்.

 குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனத்திற்கு முதல் ஒன்பது  மாத காலம் முடிவுபெற்றிருக்க வேண்டும்.. இந்நிறுவனம் 50 சதவீதம்  மூன்றாம் தவணை நிதி பெற தகுதியுடையவர்கள் ஆவர்.

இத்திட்டத்தின்கீழ், விருப்பமுள்ள தொழில் நிறுவனங்கள் வரும் 23.08.2024-ம் தேதிக்குள் திருப்பத்தூர் மாவட்டம்திட்ட இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊராக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.