செக்ஸ் நடன நாட்டியாலயா! கொரட்டியை அடுத்து பச்சூர்? திருப்பத்தூரில் தொடர் விதிமுறை மீறல்!

 ஜி.கே.சேகரன்,

  கொரட்டி என்கிற பகுதி கோவில் திருவிழாவில் செக்ஸ் நடனம் நடத்தப்பட்டதை தொடர்ந்து, அடுத்ததாக பச்சூர் திருவிழாவிலும் இது போன்ற நடனம் நடக்க உள்ளதால், நீதிமன்ற உத்தரவை பின்பற்றி அதற்கு காவல் துறை தடைவிதிக்க வேண்டும் என்று பலரும் கோருகின்றனர்.

 திருப்பத்தூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் நடன நாட்டியாலயா என்கிற பெயரில் கேரள பெண்களை வைத்து செக்ஸ் நடன நிகழ்சிகளை நடத்தி வருகிறார்கள். இதற்கு காவல் துறையினரும் பந்தோபஸ்த்து கொடுத்து அவர்கள் பங்குக்கு அவர்களும் அதை ரசிக்கிறார்கள்.

இது பற்றின விவரம் வருமாறு,

 திருப்பத்தூர் அடுத்த கொரட்டி கிராமத்தில் ஸ்ரீ அருள்மிகு காலதேஸ்வரர் சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு மாபெரும் நடன நாட்டியாலயா நடைபெற்றது.

 இந்த நடன நாட்டியாலயாவில் கேரளா மற்றும் தமிழ்நாட்டு இளம் பெண்களை வரவழைத்து மேடையில் செக்ஸ் மூவ்மென்டுகளுடன் ஆட்டம் போடவைத்தார்கள்.

 கோவில் திருவிழாவில் நடந்த இந்த செக்ஸ் டேன்ஸை சுமார் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 2000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஜொல்லுவிட்டனர்.

 அப்போது நடைபெற்ற நடன நாட்டியாலயாவில் பெண்கள் செக்ஸாக ஆடைகள் அணிந்து சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டனர்.

  நீதிமன்ற உத்தரவை மதித்து  இதுபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரைகுறை ஆடைகளுடன் எந்த இடத்தில நாட்டியாலயா நடைபெறாத நிலையில் கொரட்டி கிராமத்தில் இது அரங்கேறியது.

  இந்நிலையில் இதே மாவட்டத்தில் பச்சூரில் பத்து நாட்களுக்கு திருவிழா நடைபெறுகிறது.

  இந்த நிகழ்ச்சியிலும் இது போன்ற நாட்டியாலயாவுக்கு வழி வகுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதற்கு காவல் துறை கடிவாளம் போட்டு நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் வாஞ்சையுடன் கேட்டுக் கொள்கிறார்.