சோகம் தாடி யோசனை செந்தில் பாலாஜியிடம் தினம் 50 கேள்வியாம்!

சோகம் தாடி யோசனை செந்தில் பாலாஜியிடம் தினம் 50 கேள்வியாம்!

ம.பா.கெஜராஜ்,

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை விசாரிப்பதற்காக புழல் சிறையில் இருந்து காரில் அழைத்துச் சென்றனர். சோகம், தாடி, யோசனை என காட்சியளித்த செந்தில் பாலாஜியிடன் தினம் 50 கேள்வி என மொத்தம் 250 கேள்விகளை கேட்க அமலாக்கதுறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் ரெய்டு நடத்திய போலீஸார், கடந்த ஜூன் மாதம் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை விசாரிப்பதற்காக அழைத்து சென்ற போது தனது நெஞ்சு வலிப்பதாக கூறி கதறினார் செந்தில் பாலாஜி. இதனைத் தொடர்ந்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயக் குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு பைபால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

 பின்னர் காவேரி மருத்துவமனையில் இருந்து  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 இந்நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி அமலாக்கத்துறை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். ஆகவே  புழல் சிறைக்கு இன்று இரவு 7 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று, அங்கு அவரை காவலில் எடுப்பதற்கான பார்மலிட்டிகளை முடிக்குமாறு சிறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

 முன்னதாக நீதிமன்ற உத்தரவு இ-மெயில் மூலம் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ள புழல் சிறை நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இன்று இரவு புழல் சிறைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தனர். சிறையில் இருந்து சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்புடன் செந்தில் பாலாஜியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

  புழல் சிறையில் இருந்து அமலாக்கத்துறையினரின் காரில் செந்தில் பாலாஜி பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியின் முகம் இறுக்கமாக இருந்தது.

  செந்தில் பாலாஜி முகத்தில் எப்போதுமே புன்னமை தவழும், முகமும் பளபளவென இருக்கும். ஆனால் தற்போதைய செந்தில் பாலாஜியின் முகம் வாடி தாடியுடன் காணப்பட்டது.  அதனைத் தொடர்ந்து புழல் ஜெயிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்திற்கு செந்தில் பாலாஜியை அழைத்து வந்தனர்.

  அமலாக்கதுறை அலுவலகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட செந்தில் பாலாஜியை வரும் 12-ம் தேதி வரை விசாரிக்க உள்ளனர். அங்கு வைத்து சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் கேள்விகள் கேட்க உள்ளனர். கேள்விகளை எழுத்துப்பூர்வமாக கேட்டு, பதிலை வீடியோவில் பதிவு செய்ய உள்ளனர்.

    தினம் 50 கேள்விகள் என 250 கேள்விகள் கேட்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். செந்தில் பாலாஜி அளிக்கும் பதிலை வைத்து அமலாக்கத்துறை அடுத்த கட்டத்திற்கு இந்த வழக்கை நகர்த்தும். பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மேலும்  விசாரணை நடத்த வேண்டியிருந்தால், காவலை நீட்டிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யும். நீதிமன்றம் அனுமதி அளித்தால் தொடர்ந்து விசாரணை நடத்தும். ஒருவேளை அனுமதி மறுக்கப்பட்டால் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்.