சனாதன சீண்டலை கண்டித்து மறியல் செய்த பாஜகவினர்! கைதும் விடுவிப்பும்!

ஜி.கே.சேகரன்,
சனாதன குறித்து பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ராணிப்பேட்டை அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசா£ கைது செய்து விடுவித்தனர்.
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு சனாதன தர்மம் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்தும், சனாதானம் குறித்து மேடையில் மௌனம் காத்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு உடனடியாக பதவி விலக வலியுறுத்தி ராணிப்பேட்டை, ராஜேஸ்வரி திரையரங்கம் முன்பாக பாஜாகவினர் மறியல் நடத்தினர்.
அதேபோல் ராணிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலை துறை அலுவலகத்தை முற்றுகையிடும் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பிய பாஜக கட்சி சேர்ந்த நிர்வாகிகள் அனைவருமே போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனாலும் போராட்டத்தை கைவிடாத நிர்வாகிகள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்ரய்யா தலைமையிலான போலீசார் கொண்ட குழு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பாஜகவினரை கூண்டோடு கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.ஸ்
அதே போல் வேலூரிலும் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள், பின்னர் அவர்களும் விடுவிக்கப்பட்டனர்.