ஏரிகளை தூர்வாரி விவசாயிகள் பயன்பெற கோரிக்கை!

கு.அசோக்,
வேலூரில் ஆட்சியர் தலைமையில் கிராமப்புறங்கள் மேம்பாடு குறித்து ஊராட்சித்தலைவர்களுக்கான கூட்டம் நடந்தது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ஊராட்சித்தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்தது.
இதில் ஊராட்சிமன்ற தலைவர்களும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தங்களது கோரிக்கைகளை குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் பேசுகையில் ஏரிகளை தூர்வாரி விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டுமென பேசினார்கள்.
மேலும் அடிப்படை வசதிகளான குடிநீர் சாலை வசதிகள் போன்றவைகளையும் கிராம ஊராட்சிகளுக்கும் சரியாக செய்து தர வேண்டுமெனவும் கேட்டுகொண்டனா.¢