பதவி நீக்கம் என்று ஆளுநர் சொல்வது தப்பு! கடுமையாக விமர்சித்த ஆர் எஸ் பாரதி!!

ஜி . கே .சேகரன்,
செந்தில் பாலாஜி குறித்து தமிழக ஆளுநர் அனுப்பியுள்ள ஆணையை பெற்றுகொண்டு திமுக உச்சநீதிமன்றத்தை நாடும் - ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதும் செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் செய்யப்பட்டதும் அகில இந்திய அளவில் பிரளயத்தை நாளை ஏற்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வேலூரில் பேச்சு மற்றும் பேட்டி - காவல் நாய் என ஆளுநரை விமர்சனம் செய்த ஆர்.எஸ்.பாரதி
_________________________________________
வேலூர்மாவட்டம்,வேலூர் அண்ணாகலையரங்கம் அருகில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுகூட்டம் மாநகர செயலாளர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.
இதில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர் இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் தமிழக ஆளுநர் ரவி அவர்கள் செந்தில்பாலாஜி நீக்கம் குறித்து நோட்டீஸ் கொடுத்திருக்கிறார் அவ்வாறு செய்ய அவர் யார் அவருக்கு அதிகாரமில்லை அவர் ஒரு காவல் நாய் தான் அமைச்சரவைக்கு தான் எல்லா அதிகாரமும் உண்டு ஆளுநருக்கு அதிகாரம் எல்லாம் கிடையாது.
அவர் கொடுத்துள்ள நோட்டீஸை நாளை பெற்றுகொண்டு உச்சநீதிமன்றத்தில் திமுக சட்டபடி வழக்குதொடுத்து சந்திக்க இருக்கிறோம் மணிபூரில் பெரிய கலவரம் நடக்கிறது அதனை உயிரை பணயம் வைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று மக்களை சந்திக்க சென்றால் அங்கு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்
இந்த விவகாரமும் செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் விவகாரமும் நாளை இந்தியாவில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தும் இந்த ஆளுநரை மோடியே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது நீதிமன்றம் செல்கிறோம் நாளை நீதிமன்றமே கூட மோடி ஆட்சியை கலைக்கலாம் அந்த நிலை ஏற்படும் என பேசினார்
பின்னர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில் பல்வேறு வழக்குகளை திமுக சந்தித்தது இந்த வழக்கையும் சந்திப்போம் பதவி நீக்கம் என ஆளுநர் சொன்னது தப்பு அவருக்கு அதிகாரமே கிடையாது ஏற்கனவே உச்சநீதிமன்றம் இரண்டு கவர்னர்களுக்கு கொட்டு வைத்தது ஆனால் தமிழக கவர்னரும் அதே போல் செயல்படுகிறார்.
சட்டரீதியாக இதனை சந்திப்போம் இந்தியாவிலே தீர்ப்பை பெறுவோம் மாநிலங்களுக்கு எடுத்துகாட்டாக சுயாட்சியை காப்பாற்றும் வகையில் தீர்ப்பை பெறுவோம் அமித்ஷா மோடி மீதும் 300 எம்பிக்கள் மீதெல்லாம் வழக்கு இருக்கிறது மோடி மீதே குஜராத் கலவர கொலை வழக்கு உள்ளது நோட்டீஸ் வழங்க ஆளுநருக்கு அதிகாரமே இல்லை
உச்சநீதிமன்றம் ஆதராமிருந்தால் ஆளுநர் அதனை நிருபிக்கட்டும் இதில் முகாந்திரம் மட்டுமே உள்ளது அப்படி பார்த்தால் அமித்ஷா உள்துறை அமைச்சராகி இருக்க கூடாதே ஜெயலலிதா இருக்கும் போது அவரால் உருவாக்கப்பட்டவர் தான் செந்தில் பாலாஜி என கூறினார்
ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவர் என தவறாக கூறிய ஆர்.எஸ்.பாரதி கொச்சையாக ஆளுநரை காவல் நாய் என கூறி பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது