பொதுமக்களும் காவல் துறையும் நண்பர்கள்?! கைப்பந்து போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்.பி.!

பொதுமக்களும் காவல் துறையும் நண்பர்கள்?! கைப்பந்து போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்.பி.!

ஜி.கே.சேகரன்,

 ஆம்பூர் அருகே காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் நடைப்பெற்ற கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் வகையில் கைப்பந்து போட்டி நடைப்பெற்றது,

காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரிடையே நல்லுறவை ஏற்படுத்தும் நிகழ்சியான   இதில் 5 அணிகள் பங்கேற்றது.

 இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் அணி முதல் பரிசையும், விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த அணி இரண்டாவது பரிசையும், காட்டுக்கொல்லை பகுதியை  சேர்ந்த  அணி மூன்றாவது பரிசையும், வென்றனர்.

 வெற்றிப்பெற்ற அணிகளுக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கோப்பை வழங்கி, சிறப்பாக விளையாடிய விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 பின்னர் பேசிய அவர், இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது எனவும், சாதி, மதம் பார்க்க வேண்டாம் எனவும், குழந்தை திருமணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்த போட்டியை காண பல்வேறு கிராமங்களிலிருந்து, இளைஞர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.