ஏரிகளில் வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை!

ஏரிகளில் வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை!

கு.அசோக்,

  கடந்த மாதம் புயல் காரணமாக தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் கன மழை மிதமான மழை பெய்தது. இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாறு பொன்னையாறு நீர்வரத்து காரணமாக கால்வாய் வழியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கு நீர் நிறுப்பப்பட்டது.

  உபரிநீர் கடை வாசல் வழியாக வெளியேறி வருகிறது. கோடைகாலங்களில் குடிநீர் தட்டுப்படுகினறி கிடைக்கவும் ஏரி நீரை சேமிக்கவும் ஏரியின் வெட்டு மதகுகளில் ஆண்டுதோறும் கார்த்திகை 16 ஆம் தேதிக்கு மேல் வெட்டு மதகுகளில்  மரப்பலகைகள் கொண்டு தடுப்பு அமைப்பது வழக்கம்.

   சோளிங்கர், பெருங்காஞ்சி, ரெண்டாடி  உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில்  இதுவரை வெட்டு  மதகுகளில்  தடுப்பு அமைக்கப்படாததால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

  நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். தண்ணீரை சேமிக்கும் விதமாக முறையாக தடுப்பு அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.