மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு!

 கு.அசோக்,

 மேல்நிலை பள்ளி மற்றும் விடுதி வளாகத்திற்குள் இளைஞர்கள் தொடர்ந்து பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு தொந்தரவு அளிப்பதாக கூறி பகுதி மக்கள் குற்றச்சாட்டு இருந்த நிலையில், நேற்று முன் தினம் அதே போன்ற செயலில் ஈடுபட்ட நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த மக்கள். முறையாக மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு கேட்டும் அளிக்காத காவல்துறையினரை கண்டித்து மறியலில் ஈடுபட முயன்ற பெற்றோர்கள். 

  பள்ளியை முற்றுகையிட்டு தொடர்ந்து வாக்குவாதம் ஆனது நடைபெற்றது

  இராணிப்பேட்டை மாவட்டம்,  அரக்கோணம் பகுதியில் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் இதே வளாகத்தில் அரசினர் மாணவியர் விடுதியும் செயல்பட்டு வருகிறது.

   இந்த நிலையில் நீண்ட நாட்களாக இளைஞர்கள் சிலர் பள்ளியின் சுற்றுச்சுவர் மீது ஏறி மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

  இந்தச் சம்பவத்தை குறித்து மாணவிகளின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் சார்பில் காவல்துறையினருக்கு நடவடிக்கை மேற்கொள்ள புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை காவல் துறையினர் இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

  இந்நிலையில்  இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த செயலை கண்டித்து மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அரக்கோணம் எஸ்.ஆர். கேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர காவல் ஆய்வாளர் தங்க குருநாதன் தலைமையிலான காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

  மேலும் காலைப் பொழுது என்பதாலும் பல்வேறு பணிகளுக்கும் அதே போல் பள்ளிகளுக்கும் செல்லும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறி மறியலை கைவிடுமாறு காவல் துறையினர் கேட்டுக் கொண்டதன் பேரில் பெற்றோர்கள் மறியலை கைவிட்டனர்.

  அதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து தலைமை ஆசிரியர் அறையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  தொடர்ந்து காவல்துறையினர் பெற்றோர்களிடம் மற்றும் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் சமாதானம் அடையாத பெற்றோர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்இதன் காரணமாக பள்ளி வளாகத்தில் சலசலப்பு நிலவியது.

 பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் பெற்றோர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.