போலிசார் கட்ட பஞ்சாயத்து! அண்ணனை மட்டை செய்த தம்பி! தீ வைத்தது யார்! திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்!!

ஜி.கே.சேகரன்,
தீ
ஆம்பூர் அருகே காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயில் மூங்கில் மரங்கள் மற்றும் செடி கொடிகள் எரிந்து நாசமானது
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சிக்குட்பட்ட ஊட்டல் பகுதியில் மலை அடிவாரத்தில் அடர்த்தியான மூங்கில் மரங்கள் இருந்தன.
அந்த பகுதியில் திடீரென தீ பற்றி பரவியது. இதில் மூங்கில் மரங்கள் மற்றும் செடி கொடிகள் தீயில் கருகி நாசமாகியது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் வனத்துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இரவு போராடி காலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கடந்த சில நாட்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 110 டிகிரியை நோக்கி வெயில் ஏறி வரும் நிலையில் அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட தீ விபத்தா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்துள்ளார்களா என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மசூதி மறியல்.
ஆம்பூரில் மசூதி நிர்வாகத்தை கண்டித்து 50க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூரில் உள்ள நீலிக்கொல்லை பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நிர்வாக குழு தேர்தல் நடத்துவது தொடர்பாக சில முரண்பாடுகள் இருந்து வந்ததாக தெரிகிறது.
குறிப்பாக வாக்பு வாரிய அலுவலர்கள், ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும், பள்ளி வாசல் நிர்வாக குழு தேர்தலுக்கு, வேட்புமனு தாக்கல் செய்த போது ஒரு தரப்பினரின் மனுக்களை மட்டும் பெற்றுக்கொள்வதாகவும் குற்றம் சாட்டி வந்தனர்.
ஏற்கனவே வாக்பு வாரிய அலுவலர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக பிரச்சனை நிலவி வந்த நிலையில், வாக்பு வாரிய அலுவலர்களை கண்டித்து, கடைகளை அடைத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆம்பூர் வி.ஏ.கரீம் சாலையில் நடைபெற்ற இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு, பின்னர் இருதரப்பினரையும், ஆம்பூர் நகர காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து கட்டபஞ்சாயத்து செய்தனர்.
அண்ணனை மட்டை செய்த தம்பி.
ஜோலார்பேட்டை அருகே தாயை மதுபோதையில் தாக்கிய அண்ணனை தடுக்கச் சென்று தலையில் கல்லால் பலமாக தாக்கிய தம்பி! சிகிச்சையில் இருந்த அண்ணன் உயிரிழப்பு- தம்பி கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலோரி முத்தூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மனைவி மலர் இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். முதலாவது மகன் சந்தோஷ் கடந்த 17.04.2024ம் தேதி அன்று இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அம்மா மற்றும் அக்காவிடம் இரவு ஒரு மணி அளவில் இருவரையும் அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் இதனை தடுக்க வந்த தம்பி சஞ்சய் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து அருகில் இருந்த கல்லை எடுத்து சந்தோஷம் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.இவரை மீட்டு குடும்பத்தினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து தலையில் காயம் பட்டதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளனர்.
இவரை பரிசோதித்த மருத்துவர்கள் தலையில் பலத்த காயமடைந்துள்ளதால் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிகிச்சையில் இருந்த சந்தோஷ் கடந்த பதினெட்டாம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பின்னர் விசாரித்தத்தன் பேரில் சஞ்சய் தான் அவரது அண்ணனை கொன்றார் என தெரிய வந்தது.
இதனை அடுத்து அண்ணை கொலை செய்த தம்பி சஞ்சயை காவல்துறையினர் கைது செய்தனர்