சுழன்று சுழன்று ஆர்பாட்டம் நடத்திய பாமக!

ஜி.கே.சேகரன்,
வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
வேலூர்மாவட்டம்,
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
மாவட்டத்தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்த இதில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க கோரியும் உச்சநீதிமன்றம் தரவுகளோடு அளித்தால் அதற்கு தடையில்லை என கூறி 1000 நாட்கள் கடந்த பின்னரும் தமிழக அரசு அலட்சியமாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காததை கண்டித்தனர்.
இதில் மாவட்ட செயலாளர் ஜெகன் ,மாநில துணை தலைவர் முன்னாள் அமைச்சர் என்.டி.சண்முகம், நிர்வாகிகள் அக்னிவேல் முருகன் செங்குட்டுவன்,சரவணன்,வரலட்சுமி உள்ளிட்ட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க கோரி கோஷங்களை எழுப்பினார்கள்
குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரிலும் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
பாமக மேற்கு மாவட்டச் செயலாளர் ஜி கே ரவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம்,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் திமுக அரசை கண்டித்து திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பாமக மாவட்ட தலைவர் குட்டிமணி, மகளிர் அணி மாநில தலைவி நிர்மலாராச, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன், பொன்னுசாமி , உள்ளிட்டோர் பங்கேற்றனர்
வாணியம்பாடியில், பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இராணிப்பேட்டைமாவட்டம்,
முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம் தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில் மாவட்டத்தலைவர் சுப்பிரமணி, மாநில துணைதலைவர் இளவழகன்,முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி, பசுமைதாயகம் பொறுப்பாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரக்கோணத்தில் பாமக சார்பில் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
எஸ் ஆர் கேட்டில் இருந்து மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் பாமகவினர் வட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் மாவட்ட தலைவர் செல்வகுமார், மாவட்ட பொருளாளர் உமா மகேஸ்வரி, அமைப்புச் செயலாளர் அ.ம.கிருஷ்ணன், இளைஞர் சங்க செயலாளர் சக்கரவர்த்தி, மற்றும் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என பல கலந்து கொண்டனர்.