போக்கு காட்டும் சிறுத்தை! ஓடி ஓடி தேடும் வனத்துறையினர்!

ஜி.கே.சேகரன்,
சிறுத்தை தாக்கி ஆடு பலி, பசுமாடு காயம் - சிறுத்தை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தை பிடிக்க 6வது நாளாக முயற்சி - காட்டை ஒட்டி உள்ள கிராம மக்கள் அச்சம்.
வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அடுத்த துவம் கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி சிறுத்தை தாக்கி அஞ்சலி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்ந்து ஆறாவது நாளாக வனத்துறையினர் ட்ரோன் கேமரா மற்றும் ட்ராப் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் துருவம் காப்பு காட்டில் சிறுத்தை பிடிக்க கூண்டை வைத்து பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பரதராமி அடுத்த மேல் அனுப்பு கிராமத்தில் சிவலிங்கம் என்பவர் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
பட்டியில் கட்டி வைத்திருந்த ஆட்டை சிறுத்தை தாக்கி உயிரிழந்துள்ளது. மேலும் அவர் வளர்த்து வந்த பசு மாட்டையும் தாக்கியுள்ளது.
காலை வந்து பார்க்கும்போது ஆடு இறந்த கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது பற்றி பொதுமக்கள் கூறுகையில் சிறுத்தை மனிதர்களை தாக்கி கால்நடைகளையும் தாக்கி உயிரிழந்தது தொடர்கதையாகவே உள்ளதாகவும் இதனால் நாங்கள் அச்சமடைந்து உள்ளோம்.
மேலும் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் உயிர்பலி ஏற்படுவதற்கு முன் வனத்துறையினர் சிறுத்தையை பிடித்து காப்பு காட்டிலோ அல்லது வனவிலங்கு பூங்காவிலோ விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.