உடன்படாத விஷயங்களுக்கு இனி ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை! வாயை திறந்த பழனிச்சாமி!!

உடன்படாத விஷயங்களுக்கு இனி ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை! வாயை திறந்த பழனிச்சாமி!!

ம.டெல்லிராஜன்,

பாஜக வுடனான கூட்டை முறித்துக் கொண்டிருக்கும் அதிமுகவின் நடவடிக்கையை திமுகவினரும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாடகம் என்று கிண்டல் அடித்து வருகின்றனர்¢. பாஜக மீது பயம் இருப்பதால்தான் இன்னும் இந்தக் கூட்டணி முறிவு பற்றி எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை எனவும் அவர்கள் பேசினர்.

 அப்படிப்பட்ட நிலையில்,  எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் கூறுகையில், "அதிமுக தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பாஜகவை விட்டு விலகும் முடிவை நாம் எடுத்தோம். இது அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு அல்ல. ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் முடிவு.

 இதைப் பற்றி பேசும் எதிர்க்கட்சியினர், இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என்பதை ஒரு குற்றச்சாட்டாக சொல்லி வருகிறார்கள்.பொதுக்குழு கூடி தீர்மானமே நிறைவேற்றி விட்டோம். பிறகு நான் வேறு தனியாக சொல்ல வேண்டுமா என்ன? தேசியக் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் போது, நமக்கு உடன்படாத விஷயங்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுகிறோம். ஆனால், இனி அந்த நிலைமை நமக்கு இல்லை" என எடப்பாடி பழனிசாமி கூறினார்.