என்னாது...? 72 லட்சம் தரவுகள் காணவில்லை!அதுக்கு நாங்கள் பொறுப்பா என ஆர்பாட்டம்!

என்னாது...? 72 லட்சம் தரவுகள் காணவில்லை!அதுக்கு நாங்கள் பொறுப்பா என ஆர்பாட்டம்!

கு.அசோக்,

வேலூர் மற்றும் இராணிப்பேட்டையில் அமைப்புசாரா ஆட்டோ தொழிலாளர்கள் நலவாரிய குளறுபடிகளை சரி செய்ய கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.

 வேலூர்மாவட்டம்,

வேலூ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அமைப்புசாரா ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சி.ஐடியு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ சங்க மாவட்டத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்த இதில் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள அமைப்புசாரா நலவாரியத்தில் பல குளறுபடிகள் உள்ளது 72 லட்சம் தரவுகள் காணவில்லை என நலவாரிய அதிகாரிகள் கூறுவது கண்டிக்கதக்கது.

  வழக்குபதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். ஓட்டுநர் வாரிய விபத்து நிதி 5லட்சமாக அமுல்படுத்த வேண்டும். பணப்பயன்களை இரட்டிப்பாக்கி தர வேண்டும்.

 ஆன் லைன் பதவில் உள்ள குளறுபடிகளை உடனே சரிசெய்யவும் தாமதமில்லாமல் நிதிகளை வழங்கவும் பென்ஷன் கால பென் ஷன் தொகையை காலதாமதமின்றி மாதம் மாதம் வழங்க வேண்டும்.

 தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் நிதியை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் திரளானோர் பங்கேற்று கோரிக்கைகளை பங்கேற்று கோஷங்களை எழுப்பினார்கள்.

இராணிப்பேட்டை

 இராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இந்திய தொழிற்சங்கம் மையத்தின் சி.ஐ.டியு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தொழிலாளர்கள் தெரிவிக்கையில் முறைசாரா தொழிலாளர் நல வாரிய குளறுபடிகளை சீர் செய்திட வேண்டும் முடங்கியுள்ள நல வாரிய செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும்.

  வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களையும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்திலும் இ எஸ் ஐ திட்டத்திலும் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் கட்டுமான தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி அரசு கட்டுமான பணிகளை வழங்க வேண்டும்.

  இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் பெண்கள் என அனைவரும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை வெளிப்படுத்தினர்.