மோர் பந்தல் திறந்து வைத்த அமைச்சர் எ.வ.வேலு!
ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
வெயிலின் தாக்கத்தின் காரணமாக புதிய பேருந்து நிலையம் எதிரில் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஐயப்பன் ஏற்பாட்டில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எவ.வேலு நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அப்போது பொது மக்களுக்கு வாழைப்பழம்,பப்பாளி, தர்பூசணி, தயிர், மோர், இளநீர்,ஜூஸ் மற்றும் பல வகைகள் வழங்கினர்.
இந்த நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன், மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.