கங்கனா ரனாவத் கன்னத்தில் “கை சின்னத்தை” பதித்த வீர மங்கை சஸ்பெண்ட்! போராடப் போகும் விவசாயிகள்!

Naresh.N,
நடிகையும் தற்போதைய பாஜக வின் எம்பியுமான கங்கனா ரனாவத்தை சிஐஎஸ்எப் பெண் காவலர் ஒருவர் பளார் என்று அறைந்த சம்பவம் நாடெங்கிலும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் பெண் போலிசுக்கு ஆதரவாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
நடிகையும், புதிதாக எம்.பி. தேர்தலில் ஜெயித்தவருமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எப் பெண் காவலர் குல்விந்தர் கவுருக்கு ஆதரவாக விவசாயிகள் டெல்லியில் குவிந்து வருகின்றனர். குல்விந்தர் கவுர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி வரும் ஜூன் 9-ம் தேதி முதல் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜகவின் தீவிர ஆதரவளாக விளங்கி வந்த நடிகை கங்கனா ரணாவத்துக்கு, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் போட்டியிட பாஜக சீட் வழங்கியது. இதில் 5.37 லட்சம் வாக்குகளை பெற்று கங்கனா ரனாவத் வெற்றி பெற்றார்.
இந்த சூழலில்தான், நேற்று முன்தினம் கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்துக்கு சென்றிருந்த போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த குல்விந்தர் கவுர் என்ற சிஐஎஸ்எப் பெண் காவலர், கங்கனாவின் கன்னத்தில் பளாரென அறைந்தார். எதிர்பாராமல் விழுந்த அறையால், அதிர்ச்சியான கங்கனா, விமான நிலையத்தில் இருந்து வெளியேறினார்.
டெல்லியில் 2020-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பார்த்து, தீவிரவாதிகள் என்று கங்கனா கூறியதாலேயே அவரை அறைந்தததாக சிஐஎஸ்எப் காவலர் குல்விந்தர் கவுர் தெரிவித்தார். இதையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்படியிருக்க அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டமானது ஜூன் 9-ம் தேதி பஞ்சாபின் மொகாலியில் நடைபெறவிருக்கிறது.
அன்றைய தினம் தான் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கவிருக்கிறார். அதே நாளில் பகலில் விவசாயிகள் போராட்டம் நடக்கவுள்ளது.
பெண் போலிஸ் தன்னை அறைந்த விவகாரத்தில் கங்கனா ரனாவத் பெரிய மனதுடன் செயல்பட்டிருக்க வேண்டும். அவர்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தியதற்காக அறைபட்டதை பெரிதாக்கியிருக்கக்கூடாது. அப்படி செய்திருந்தால் நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து தள்ளியிருக்கக்கூடும் என்றே கூறப்படுகிறது.