அந்த பயம் இருக்கட்டும் டா...மோடியை கடுமையாக விமர்சிக்கும் கேரளா காங்கிரஸ்! நாகரிகம் கொஞ்சமாவது இருந்தால் நலம்!

ம.பா.கெஜராஜ்,
மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வந்தால் அரசியலமைப்புச் சட்டத்தையே குழிதோண்டி புதைத்து விடுவார் என்று குற்றம் சாட்டி வந்த நிலையில் இன்றைக்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் அவர் கையில் அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை ஏந்தி நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வந்தார்.
இதை கேரளா காங்கிரசார் "அந்த பயம் இருக்கணும் டா என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள்.
நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து, "அந்த பயம் இருக்கணும் டா" என்று கேரளா காங்கிரஸ் கமிட்டி கூறியுள்ளது.
நாடாளுமன்றத்தில் கையில் இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்துடன் இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
மோடியின் அந்த புகைப்படத்துக்கு கீழே "அந்த பயம் இருக்கணும் டா" என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற போதிலும், பாஜக தனித்து நின்று பெரும்பான்மை பலத்தை பெறவில்லை. இதன் காரணமாக, நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவை பெற்று தான், பாஜக ஆட்சியமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் ஏராளமான நிபந்தனைகளை விதித்து வருகிறார்கள்.
கடந்த 2 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக தனிப்பெருமபான்மையை பெற்றதால், எந்த சட்டத்தை வேண்டுமானாலும் பாஜகவால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடிந்தது.
ஆனால், இனி அப்படி செய்ய முடியாது என்றும், எதுவாக இருந்தாலும் நிதிஷ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கூட்டணி தலைவர்களின் அனுமதிக்காக மோடி காத்திருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்து வருகின்றனர்.
அப்படியிருக்க நேற்று நாடாளுமன்றத்திற்கு தனது அமைச்சரவை சகாக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வந்தார். அப்போது அவரது கையில் இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகம் இருந்தது.
இந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், கடந்த ஆண்டு புதிய நாடாளுமன்றத்துக்கு ஒரு அரசனை போல செங்கோல் ஏந்தி வந்த மோடி, தற்போது அரசியலமைப்பு புத்தகத்துடன் வந்ததை எதிர்க்கட்சிகள் நக்கலடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கேரளா காங்கிரஸ் கமிட்டி, "அந்த பயம் இருக்கணும் டா" என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளது வம்புக்கு இழுத்துள்ளார்கள்.
இதை பார்க்கும் பலர் கேரளா காங்கிரஸார் கொஞ்சம் நகரீகமாக செயல்பட வேண்டும் என்று ஆதங்கப்பட்டு வருகிறார்கள்.