5 நாட்களில் ரூ. 775 கோடியாக உயர்ந்த சந்திரபாபு நாயுடுவின் குடும்ப சொத்து!

வி.டி.வித்யாசாகர்,
வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஜூன் 4 ஆம் தேதிக்கு முன்னாளில் பங்கு சந்தையில் 30 லட்சம் கோடி ரூபாவை பாஜக தரப்பு ஈட்டியிருக்கிறது என்று ராகுல் காந்தி வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். அப்படியிருக்க ஆந்திர பிரதேச மாநிலத்தில் வெற்றிப்பெற்ள்ள சந்திரபாபு நாயுடு குடும்பசொத்தின் மதிப்பு 5 நாட்களில் 775 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
சந்திரபாபு நாயுடுவால் தொடங்கப்பட்டது ஹெரிடேஜ் ஃபுட்ஸ். இது பால் மற்றும் பால் சம்மந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களாக அவரது மனைவி புவனேஷ்வரி மற்றும் அவரது மகன் லோகேஷ் இருந்து வருகிறார்கள். மும்பை பங்குச் சந்தையின் தரவுகளின்படி புவனேஷ்வரியுடன் 2,26,11,525 பங்குகளும், மகன் லோகேஷிடம் 1,00,37,453 பங்குகளும் உள்ளன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பால் திங்கட்கிழமை பங்குகள் உயர்வை கண்டன. கடந்த ஜூன் 3-ந்தேதி ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு 424 ரூபாயாக இருந்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஜூன் 4-ந்தேதி ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்கு கிடுகிடு என உயர்ந்தது.
சந்திரபாபு நாயுடு தலைவராக உள்ள தெலுங்கு தேசம் கட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றதுதான் இதற்கு முக்கிய காரணம்.
நேற்று வெள்ளிக்கிழமை 661.25 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனை வைத்து பார்க்கும்போது புவனேஷ்வரின் சொத்தி மதிப்பு 535 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. லோகேஷின் சொத்து மதிப்பு 237 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவில் கடந்த ஐந்து நாட்களில் சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு 770 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் என பெரும்பாலான மாநிலங்களில் பால் விற்பனை செய்து வருகிறது நினைவு கூறத்தக்கதாகும்!