ஐ.ஜி.சார் ப்ளீஸ் ஹெல்ப்! புரோக்கர்கள் பிடியில் பேர்ணாம்பட்டு காவல் நிலையம்! புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் பதற்றம்!

கு.அசோக்,

  பேரணாம்பட்டு பகுதியில் கட்சி பிரமுகர்களை தாக்கி தள்ளு முள்ளு.... துணிக் கடை  வியாபாரிகளின் அட்டகாசம்-பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் சாலை ஓரா வியாபாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் குவிந்ததால் பரபரப்பு.

 வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் நகர மன்ற உறுப்பினர் மற்றும் கட்சி பிரமுகர்களை தாக்கி தள்ளு முள்ளு செய்த சாலை ஓர வியாபாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.  கட்சி பிரமுகர்கள் துணி கடை வியாபாரிகள் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரப்பரப்பு நிலவியது.

  பேரணாம்பட்டு நகராட்சி 21 வார்டு கொண்ட நகராட்சியாக இந்த நகராட்சிக்குட்பட்ட ஆதம் ஷா இக்பால் ரஹ்மாணியா பஜார் போன்ற வீதிகளில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பர்கூர் திருப்பத்தூர் நாட்றம்பள்ளி வாணியம்பாடி  போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட சாலை ஓரம் வியாபாரிகள் கடை போடுகிறார்கள்.

  இவர்கள் பேரணாம்பட்டு நகராட்ச்சிக்கு சந்தா செலுத்தி துணிகளை மலிவான விலைக்கு போட்டு வியாபாரம் செய்து வருகின்றனர்.

  இப்பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் மலிவான விலைக்கு இங்கு தரமான துணிகள் விற்பனை செய்யப்படுகிறது என்பதாலும் வேலைக்கு செல்பவர்கள் வார நாட்களில் வேலைக்கு சென்று விட்டு விடுமுறை நாட்களிலும்   பண்டிகை நாட்களிலும் இங்கு குவிந்து தங்களுக்கு பிடித்த துணிகளை மலிவான விலைக்கு வாங்கி கொண்டு செல்கின்றனர்.

   இதனால் அங்குள்ள துணி கடை வியாபாரிகளின் வியாபாரம் தடைப்பட்டு வருவதால் இது குறித்து துணி கடை வியாபாரிகள் பேரணாம்பட்டு நகராட்சி மற்றும் காவல் நிலையத்தில் சாலை ஓரா வியாபாரிகள் கடை போடக் கூடாது என்று புகார் மனு கொடுத்துள்ளனர்.

   இது ஒரு புறம் இருக்க  சாலை ஓர வியாபாரிகள் வழக்கம் போலவே கடை போடுவதற்காக வந்துள்ளனர்.அவர்களை பேரணாம்பட்டு துணி கடை வியாபாரிகள் இங்கு துணிகளை எல்லாம் போட்டு வியாபாரம் செய்ய கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  இதனை அறிந்த எஸ்டிபிஐ கட்சியின் நகர மன்ற உறுப்பினர் அதிக்கூர் ரஹ்மான் மனித நேய மக்கள் கட்சியின் நகர தலைவர் அப்துல் சமத் ஆகியோர் கட்சி நிர்வாகிகள் உடன் சென்று துணிக் கடை உரிமையாளர்களிடம் நியாயம் கேட்டனர்.

  இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டு பின்பு கைகலப்பாக மாறியுள்ளது.

  மேலும் இது குறித்து தகவல் அறிந்த வந்த  பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

   மேலும் இது குறித்து சாலை ஓர வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோரும், தொடர்ந்து பேரணாம்பட்டு எஸ்டிபிஐ கட்சியின் சார்பிலும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பிலும் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

  இது குறித்து பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 இதனால் பாதுகாப்பு பணிக்காக குடியாத்தம் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.

குறிப்பு:-  பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தை பொறுத்தவரைக்கும்  சில அரசியல்வாதிகளின் கைகளில் அது இயங்குவதாக கூறப்படுகிறது. இந்த காவல் நிலையத்துக்கு எந்த புகார்கள் வந்தாலும் அவற்றை ஒரு சில அரசியல்வாதிகள் பார்த்து ரேட் பேசிய பின்னர் தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறதாம்.

  அது மட்டுமின்றி தடை செய்யப்பட்ட அனைத்து வியாபாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மணல், மண் திருட்டு மற்றும் ஜிஎஸ்டி பெயரில் தில்லாலங்கடி எல்லாம் கனஜோராக நடத்தப்படுகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

   வடக்கு மண்டல ஐஜி அவர்களின் பார்வை இந்த பக்கம் திரும்பினால் மக்கள் குஷி ஆவார்கள்.