ஊட்டி போல மாறிய ஏலகிரி!

ஜி.கே.சேகரன்,

ஏலகிரி மலையில்  மாலை நேரமாகியும் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு! முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்ற வாகன ஓட்டிகள்.

 திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தளமாக விளங்கி வரும் நிலையில், இது ஏழைகளின் ஊட்டி எனவும் அழைக்கப்படுகிறது.

 ஆகவே தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

 இந்த நிலையில் ஏலகிரி மலையில் அதிகாலை முதலே சாரல் மழை பொழிந்து கரு மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 

மாலை நேரங்களில் கருமேகத்துடனும் கடுமையான பணிப் பொலிவுடன் ஏலகிரி மலை காட்சியளிக்கிறது.

  மேலும் எதிரே வரும் வாகன ஓட்டிகள் கண்ணுக்கே தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு பெய்து வருகிறது.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

 ஊட்டியில் இருக்கும் பருவநிலை போல் தற்போது ஏலகிரி மலையிலும் கடும் பனிப்பொழிவுடன் காணப்படுகிறது.இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் வரத்து ஏலகிரி மலைக்கு அதிகமாக தொடங்கிள்ளது.