உரிமையாளரின் மனைவியுடன் உல்லாசம்...திருநெல்வேலி ஸ்டைலில் வாலிபர் குத்திக் கொலை!
ஜி.கே.சேகரன்,
மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் இளைஞரை நண்பர்களுடன் கத்தியால் குத்தி கொலை செய்த கணவர், இது தொடர்பாக 12 மணி நேரத்தில் கணவன் உட்பட நான்கு பேரை கைது செய்த போலீஸார்.
திருநெல்வேலியை சேர்ந்த அல்போன்ஸ் (35) என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு, கே.பி.அக்ராகரம் பகுதியில் மிச்சர் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். அந்த கம்பெனியில் மிசசர் போடும் மாஸ்டராக கடந்த 5 ஆண்டுகளாக கே.பி.அக்ரகாரம் பகுதியை சேர்ந்த பவன்குமார் (19), சந்தோஷ்குமார் (17) அண்ணன் தம்பி ஆகிய இருவரும் வேலை செய்து வந்து உள்ளனர்.
இந்த நிலையில் பவன்குமாருக்கும் மிச்சர் கம்பெனி ஓனர் அல்போன்ஸ் மனைவி சத்யா என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் ஓனர் அல்போன்ஸ்க்கு தெரிய வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கம்பெனியை விட்டு பவன்குமார் மற்றும் அவரது தம்பி சந்தோஷ்குமார் இருவரும் கம்பெனியை விட்டு நின்று உள்ளனர்.
அதன் பின்னர் பவன்குமார் திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த மரிமாணிக்குப்பம், தோட்டிகுட்டை என்ற கிராமத்தில் உள்ள அவரது பாட்டி சுசிலாபாய் வீட்டில் தங்கி வந்தார்.
இந்த நிலையில் சத்யாவும், பவன்குமாரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். மேலும், பவன்குமார் சத்யாவிடம் அடிக்கடி பணம் வாங்கி வந்துள்ளார். மேலும் பலமுறை தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அல்போன்ஸ் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக மனைவி சத்யா தன்னுடைய கணவன் ஆல்போன்ஸ் மீது பெங்களூரு கே.பி. அக்ரஹாரம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் கணவன் ஆல்போன்ஸ் உடன் சத்யா வாழாமல் அவருடைய அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அல்போன்ஸ் கள்ளக்காதலனை தீர்த்து கட்ட திட்டமிட்டு பவன்குமாரின் தம்பி சந்தோஷ்குமாரை அல்போன்ஸ் நேற்று முன்தினம் காரில் கடத்தி சென்று அடித்து துன்புறுத்தி பவன்குமார் எங்கே உள்ளார் என கேட்டுள்ளார்.
அதன்பின்னர் மிட்டூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2 அறை எடுத்து அங்கு பவன் குமாரின் தம்பி சந்தோஷ்குமாரை அடித்து துன்புறுத்தி கையை உடைத்து உன் அண்ணன் எங்கே உள்ளான் என கேட்டுள்ளனர்.
அதன் பின்னர் சந்தோஷ் குமாரை அழைத்து கொண்டு நேற்று அதிகாலை 4 மணியளவில் அவர்களது பாட்டி வீட்டிற்கு நண்பர்களுடன் சென்ற அல்போன்ஸ், சந்தோஷ்குமாரை அழைத்து சென்று கதவை தட்டி உள்ளார்.
அப்போது கதவை திறந்த பவன்குமாரின் தாய் மீராபாய் சந்தோஷ் குமாரை பார்த்து நீ பெங்களூரிலிருந்து எப்ப வந்தாய் என கேட்டுக் கொண்டிருந்த போதே மறைந்திருந்த அல்போன்ஸ் மற்றும் அவருடன் வந்த மூன்று நண்பர்கள் வீட்டிற்குள் நுழைந்து பவன்குமாரை தேடி சென்று கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து காரில் நண்பர்களுடன் தப்பி சென்றுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பவன்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பவன்குமார் உயிரிழந்துள்ளார்.
மேலும் அல்போன்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் அடித்ததில் காயம் அடைந்த சந்தோஷ்குமார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற குரிசிலாப்பட்டு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுமதித்து பின்னர் தப்பி ஓடிய அல்போன்ஸ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் டி.எஸ்.பி சௌமியா உத்தரவின் பேரில் கந்திலி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான நான்கு பேர் கொண்ட தனிப்படை போலீசார் விரைந்து சென்று 12 மணி நேரத்திற்குள் பெங்களூர் கே.பி. ஆக்ரஹாரம் பகுதியில் மறைந்திருந்த கணவன் அல்போன்ஸ், பாக்கியராஜ், கதிர்வேல், பாலபொன்னயன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து அழைத்து வந்து குருசிலாப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் அவர்கள் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

admin
