நிதி கொடுங்க! என் புருஷன் சாராயம் குடித்து இறந்தார்! அரசியல்வாதிகளால் குழப்பம்!!

ஜி.கே.சேகரன்,
கள்ளச்சாராயம் குடித்து கணவர் இறந்ததாக நிதி உதவி கோரி மனைவி புகார் - சாவில் மர்மம் இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிப்பு.
வேலூர் மாவட்டம், ,ஒடுக்கத்தூர் அருகேயுள்ள ஆசனம்பட்டு பகுதியை சேர்ந்த குமரேசன் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக அவரது மனைவி செந்தாமரை வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் தன்னுடைய கணவர் குமரேசன் கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வந்து மயங்கி விழுந்து இறந்ததாகவும் அதனால் தனக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்க கோரிக்கை வைத்துள்ளார் இதனை ஒரு அரசியல் கட்சியினர் முன் எடுத்து செல்கின்றனர்.
இது குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, உயிரிழந்த குமரேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கியுள்ளார் அதைத்தொடர்ந்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ச்சியான உடல் நலக்குறைவு காரணமாக நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.
இருந்த போதும் இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவலை தெரிவித்துள்ளார்.
இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அதன் முடிவு வந்த பிறகு உயிரிழந்ததற்கான காரணம் குறித்து தெரிய வரும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.