ஏலகிரி மலை காவல் நிலையத்தின் அசட்டை! வேன் கவிழ்ந்து அமிர்தா இன்ஸ்டிட்யூட் மாணவிகள் காயம்!

ஏலகிரி மலை காவல் நிலையத்தின் அசட்டை! வேன் கவிழ்ந்து அமிர்தா இன்ஸ்டிட்யூட் மாணவிகள் காயம்!

 ஜி.கே.சேகரன்,

 ஏலகிரி மலைக்கு டாட்டா ஏசி வாகனத்தில் சுற்றுலா சென்ற தனியார் கல்லூரி மாணவிகள் மலைப்பாதையில் உள்ள மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் விபத்தில் சிக்கினார்கள். டாடா ஏசி வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் - திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அனுமதி.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர் பெரியகுளம் பகுதியில் சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமாக அமிர்தா இன்ஸ்டிட்யூட் என்ற பெயரில் இன்ஸ்டிட்யூட் நடத்தப்பட்டு வருகிறது.இதில் திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதியிலிருந்து மாணவிகள் இந்த இன்ஸ்டியூட்டில் கல்வி பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் இன்ஸ்டியூட் சார்பில் காலை தனியார் பேருந்தில் நிர்வாகத்தின் சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளை ஏலகிரி மலைக்கு சுற்றுலாவிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

 அதனைத் தொடர்ந்து சுற்றுலா முடிந்த நிலையில் மாலை நேரத்தில் ஏலகிரி மலையில் இருந்து கீழே வருவதற்கு, அந்த வழியே வந்த டாட்டா ஏசி வாகனத்தில் அனைவரும் ஏறி பயணித்தனர். அந்த வாகனத்தை ஆற்காடு  பகுதியைச் சார்ந்த சிலம்பரசன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.டைல்ஸ் ஏற்றிக்கொண்டு ஏலகிரி மலைக்குச் சென்றுவிட்டு திரும்பிய நிலையில் வாகனம் காலியாக வந்த காரணத்தினால் மாணவிகள் மற்றும் பேருந்துக்காக  காத்திருந்த பொதுமக்கள் என  சுமார் 30க்கும் மேற்பட்டோர் அந்த டாட்டா ஏசி வாகனத்தில் ஏறி உள்ளனர்.

  அப்போது ஏலகிரி மலையில் இருந்து கீழே இறங்கிய போது ஏலகிரி மலை கொண்டை ஊசி வளைவான திருவள்ளுவர் வளைவு எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளானவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

   இதில் சுமார் மாணவ மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

   இந்த நிலையில் படுகாயம் அடைந்த ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி காளியம்மாள் மற்றும் வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த துரைசாமி மனைவி காளியம்மாள், மற்றும் ஹேமாவதி, பிரேமாவதி,ஆகியோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

   மேலும் இந்த சம்பவம் குறித்து ஏலகிரி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுற்றுலாவகற்கு சென்று வீடு திரும்பிய நிலையில் மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்கள் விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் விபத்துக்கு உள்ளானவர்களை காண திருப்பத்தூர் கோட்டாட்சியர் பானு சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த டாடா ஏசி வாகனத்தில் மாணவிகளையும் பொதுமக்களையும் ஏற்றிச்சென்றதை ஏலகிரி மலை காவல் நிலையத்தினர் வேடிக்கை பார்த்துக்க் கொண்டிருந்துள்ளார்கள். அவர்கள் தடுத்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது என்பது பார்வையாளர்களின் கருத்து.