எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம் .எல் .ஏ.க்கள் இன்று உண்ணாவிரதம்!

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம் .எல் .ஏ.க்கள் இன்று உண்ணாவிரதம்!

  ம.பா.கெஜராஜ்,

 அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது.

 கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து நேர்மையான விவாதம் மறுக்கப்பட்டு, அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அடிப்படை ஜனநாயகத்திற்கு விரோதமானது!

 எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மடைமாற்ற அரசியலால் கடந்துவிட முயற்சிக்கும் திமுக அரசிற்கு எனது கடும் கண்டனம்.

 எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிஙிமி விசாரணை கோரியும் எனது தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (27.06.2024- வியாழக்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்துகின்றனர்.

 இந்த தகவலை எடப்பாடி பழனிச்சாமி அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்!