அதிருப்தியா? எனக்கா? ஏங்க பாட்னாவில் அவசர வேலைங்க! சொல்கிறார் நிதிஷ்!

அதிருப்தியா? எனக்கா? ஏங்க பாட்னாவில் அவசர வேலைங்க! சொல்கிறார் நிதிஷ்!

ம.பா.கெஜராஜ்,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த எதிர்கட்சிகளின் கூட்டத்துக்கு பீகார் முத்ரலமைச்சர் நிதிஷ்குமார் வந்த நிலையில் அவரை விமர்சனம் செய்து டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்ட்டன. அது ஏதோ வாழ்த்து பேனர் என்று நினைத்துக்கொண்ட பெங்களூரு போலிசார் அதை அப்படியுஏ விட்டுவிட்டனர்.  அது நிதிஷை பப்பு ஷேம் செய்து வைக்கப்பட்ட பேனர் என்று பின்னர் தான் தெரியவந்தது. இது பற்றி அறிந்த நீதிஷ் கொஞ்சம் மூட் அவுட்டானதாக சொல்லப்பட்டது.  

 இந்நிலையில் கூட்டம் முடிந்தவுடன்  எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். ஆனால் இதில் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை. இது குறித்து பேசிய பா.ஜ.க. தலைவர் சுஷில் மோடி, எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தன்னை அறிவிக்காததால் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்ததாகவும், அதனாலேயே அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்வில்லை எனவும் கூறினார்.

 அப்படியிருக்க நிதிஷ் குமார் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுப்பற்றி அவர் கூறுகையில், "எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, முடிவில் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். உடனடியாக பாட்னாவுக்கு வர வேண்டியிருந்ததால், கூட்டத்துக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே எனது முயற்சி. இப்போது அது வடிவம் பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அழிந்துவிடும்" என காட்டமாக சொல்லியிருக்கிறார்.