முத்துராமலிங்க தேவரிடம் அண்ணா மன்னிப்பு கேட்டாரா? கொதிக்கிறார் ஆர். எஸ். பாரதி!

ஜி.சாந்தகுமார்,
முன்னாள் முதல்வர், பேறிஞர் அண்ணா குறித்து தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பேறிஞர் அண்ணா அவர்கள் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் மாநாட்டில் பார்வதி தேவியை விமர்சித்து பேசியதாகவும் அதற்காக அவரை முத்துராமலிங்க தேவர் மிரட்டியதாகவும் தெரிவித்தார். முத்துராமலிங்கத் தேவர் மிரட்டியதை தொடர்ந்து அண்ணா மன்னிப்பு கேட்டுவிட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஆ£.¢எஸ். பாரதி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது அவருக்கு அரசியல் தெரியவில்லை என்பதை காட்டுகிறது என்றார்.
கிராமத்தில் "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்று ஒரு பழமொழி சொல்வார்கள், அதுபோல அண்ணாவின் பெருமை அண்ணாமலைக்கு தெரிவது நியாயம் கிடையாது என்றார். திமுகவும் தமிழ்நாட்டு மக்களும் அண்ணாவைப் பற்றியோ பெரியாரைப் பற்றியோ எவன் பேசினாலும் அனுமதிக்க மாட்டோம் என்றும் ஒருமையில் எச்சரித்தார்.
வயதில் மூத்தவர்கள் கூட அண்ணா என்றுதான் அழைக்கிறார்கள், ஆனால் நேற்று அரசியலுக்கு வந்த அண்ணாமலை, அண்ணாதுரை என ஆணவமாக அழைக்கிறார் என சாடினார். அண்ணா மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடு தான் மேய்த்திருப்பார் என்றும் அவர் இன்று ஐபிஎஸ் ஆக உயர்ந்திருப்பது அண்ணாவும் பெரியாரும் போட்ட பிச்சை என்றும் கடுமையாக சாடினார்.
அண்ணாமலையின் பாட்டனார் இருந்திருந்தால் அண்ணாவின் பெருமை குறித்து கூறியிருப்பார் என்று கூறிய ஆர்எஸ் பாரதி, அண்ணாமலை இப்படி பேசுவதை நிறுத்தாவிட்டால் மீண்டும் கர்நாடகாவுக்கே ஓடிப்போகும் நிலை ஏற்படும் என்றும் சொன்னார்.