வேலூர் அருண் ஹோட்டலில் விபத்து பெண் பலி

கு அசோக்
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் ஓட்டலின் பின் பக்க சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் மூன்று பேர் சிக்கினார்கள் தீயணைப்புத்துறையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
____________________________
வேலூர்மாவட்டம்,வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மிகவும் பழமை வாய்ந்த அருண் ஓட்டல் உள்ளது இந்த ஓட்டலில் இன்று பின் பக்கத்தில் கட்டுமான பணிகள் நடந்துகொண்டிருந்த போது திடீரென மேல் இருந்து சுவர் இடிந்து விழுந்தது இதில் இடிபாடுகளில் மூன்று பேர் சிக்கிகொண்டனர் இதில் இடிபாடுகளில் சிக்கி கொண்டவர்களை வேலூர் தீயணைப்புத்துறையினர் வந்து ச மீட்கும் பணியில் ஈடுபட்டனர் 2 பெண்கள் ஒரு ஆண் என மூவரையும் மீட்டனர்.
அவர்களை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து மீட்கபட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.
முதல் கட்ட விசாரணையில்அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை மேலும் இரண்டு பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் இறந்தவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை இதுகுறித்து வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து நிலையத்திலேயே ஓட்டல் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலியானதால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் காணப்பட்டது.
சம்பவ இடத்திற்கு மாவட்ட துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்