இலவச மிதிவண்டி திட்டத்தை கொண்டு வந்தது திமுகவா? அதிமுகவா?

ஜி.கே.சேகரன்,
2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச மிதி வண்டி திட்டத்தை 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் துவங்கியதாக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதால் அதிகாரிகள் அதிர்ச்சி - கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்கும் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து கொண்டிருகிறார்கள் என்.எல்.சி அதிமுக போராட்டம் அனுமதி மறுப்பு குறித்து கேட்டதற்கு பதில் கூறாமல் நழுவிய நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் 7ஆவது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை பொதுமக்களின் பார்வைக்காக வேலூர் வந்தநிலையில் மேளதாளங்கள் முழங்க அதிகாரிகள் வரவேற்றனர்.
இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு கோப்பையை திறந்து வைத்து பேசினார்.
இதன் பின்னர் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளியில் தமிழக அரசின் சார்பில் வழங்கபடும் இலவச மிதி வண்டி திட்டத்தை மாணவர்களுக்கு வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர், மாவட்டத்தில் இலவச மிதி வண்டி வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,அமுலு, மேயர் சுகாஜாதா மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு, கவுன்சிலர் அன்பு, மண்டல குழு தலைவர் புஷ்பலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர் மாணவ,மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
இதே போன்று மாவட்டத்தில் பொன்னை திருவலம் ஆகிய பகுதிகளிலும் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது
முன்னதாக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் மேட்டூர் அனைக்கு கர்நாடக அரசு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை விட்டுகொண்டு தான் உள்ளனர் கர்நாடக அரசு தண்ணீரை கொடுக்கிறது பாஜக யாத்திரை என்ன யாத்திரை என்பதை எங்கள் தலைவரே சொல்லிவிட்டார் என்.எல்.சி போராட்டம் அதிமுகவுக்கு அனுமதி மறுப்பு குறித்து கேட்டதற்கு பதில் கூறாமல் நழுவி சென்றார்.
காட்பாடி அரசு பள்ளி விழாவில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பேசினார்.
பின்னர் விழாவில் பேசிய நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சைக்கிள் வழங்கும் திட்டம் 2006 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதனை தான் தொடர்ந்து வழங்கி வருகிறோம் என்று பேசினார்.
இது அதிகாரிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது காரணம் 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தான் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.