விவசாய நிலங்களை அழிப்பது கண்டனத்துக்குரியது! ஜி.கே.வாசன் பேட்டி!

விவசாய நிலங்களை அழிப்பது கண்டனத்துக்குரியது! ஜி.கே.வாசன் பேட்டி!

க.பாலகுரு,

 நெய்வேலி நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு விவசாய நிலங்களை அழிப்பது கண்டனத்துக்குரியது என தமாக தலைவர் ஜி.கே. வாசன் திருவாரூரில் பேட்டி.

 திருவாரூரில் தனியார் நிறுவனம் சார்பில் பல்வேறு துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு வருகை புரிந்த தமிழ் மாநில காங்கிரசின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது ..

 டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கர்நாடக அரசிடம் இருந்து தமிழக விவசாயிகளுக்கு தேவையான நீரை பெற்று தர வேண்டும் எனவும், நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் தடுப்பணை பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்றார்.

¢ மேலும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் விவசாயிகளின் விவசாய நிலத்தினை அழித்து வருவது கண்டனத்துக்குரிய செயலாகும். மணிப்பூர் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச தயாராக இருக்கும் பொழுது நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சியினர் முடக்குவது சரியானது அல்ல என்று கூறியதுடன் மணிப்பூர் மாநிலத்தில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதாகவும் விரைவில் சரியாகும் எனவும் தெரிவித்தார்.