பாமக நிறுவனரை அவதூறாக பேசிய குடியாத்தம் குமரன் மீது புகார்!

பாமக நிறுவனரை அவதூறாக பேசிய குடியாத்தம் குமரன் மீது புகார்!

ஜி.கே.சேகரன்,

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன மருத்துவர் ராமதாஸ் மற்றும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மீது அவதூறாக பேசிய திமுக முன்னாள் நிர்வாகி குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் - காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் இளவழகன் முன்னாள் அமைச்சர் எண்டி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணனை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

  அதில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைவர் மருத்துவர் அன்புமணிராமதாஸ் ஆகியோரை திமுக முன்னாள் நிர்வாகியும் பேச்சாளருமான குடியாத்தம் குமரன் சென்னை 360 என்ற யூடியூப் சேனலில் ராமதாஸ் தரக்குறைவான வார்தைகளால் பேசி இணையத்தில் பரப்பினார்.

 எனவே அவரை சட்டபடி கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த யூடியூப் சேனலை முடக்க வேண்டுமென புகாரில் தெரிவித்தனர்.

 உடன் மாவட்டத்தலைவர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் சம்பத்,.ஜெகன்,சதாசிவம்,சாரதி,துளசிராமன் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.