எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்!

எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்!

கு.அசோக்,

 நாடாளுமன்ற எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக பேசிய பாஜக எச்.ராஜா  மீது நடவடிக்கை எடுக்க கோரி சோளிங்கர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில எஸ்சி எஸ்டி பிரிவு சார்பில் சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.

 அதில் இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி அவர்களை அவதூறாக பேசிய எச்.ராஜா மற்றும் பிஜேபி கூட்டணி பொறுப்பாளர்களைக் கைது செய்யக் கோரியும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கோரியும், மாநில எஸ்சி எஸ்டி பிரிவு துணைத் தலைவர் மணிவேலு, மாவட்ட எஸ் எஸ் டி பிரிவு துணை தலைவர் தவமணி ,சோளிங்கர் மேற்கு ஒன்றிய எஸ் ,சி, எஸ் டி பிரிவு தலைவர் வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரன் ஆகியோர் சோளிங்கர் உதவி காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் அவர்களிடம் மனு கொடுத்தனர்.