ஆபத்துடன் பள்ளிக்கு செல்லும் சிறார்கள்! மழைகாலங்களில் பாலம் வேஸ்ட்!

ஆபத்துடன் பள்ளிக்கு செல்லும் சிறார்கள்! மழைகாலங்களில் பாலம் வேஸ்ட்!

ஜி.கே.சேகரன்,

 மொளகரம்பட்டி அருகே எதிர்கொள்ளும் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தை கடக்கும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள்.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டி  பகுதியில் சிலவருடங்களுக்கு முன்பு ரயில்வே சுரங்கப் பாதை கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.

 ஆனால் மழைகாலங்களில் இந்த சுரங்க பாதையில் சுமார் 4 அடி உயரம் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுத்தி வருகிறது.

 இந்த பகுதியில் 20 க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களைச் சேர்ந்த சிறார்கள் இந்த சுரங்க பாதை வழியாக தான் பள்ளிக்கு சென்று வரமுடியும்.

 அதே போல், பொதுமக்கள் பணிகளுக்கு செல்லவும் விவசாய நிலங்களில் விளையும் காய் கீரை உள்ளிட்ட விளைபொருட்கள் விற்க கொண்டு செல்லவும் இந்த வழி தான் உபயோகமாக இருந்து வருகிறது.

 ஆகவே இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லவேண்டிய நிலை உள்ளது. இதனால்  சுமார் 10 கிலோமீட்டர் சுற்றி செல்லவேண்டிய நிலை தவிர்க்கப்பட்டு வந்தது.

 ஆனால் மழைக்காலத்தில் இது சாத்தியப்படாது.

   பொதுமக்கள் கூறுகையில், இந்த ரயில்வே சுரங்க பாதை வழியாக தான் பல்வேறு கிராமங்களுக்கு  ஊர்களுக்கு செல்ல பிரதான சாலையாக இருந்து வருகிறது, மழை காலங்களில் சுமார் 4 அடி வரை மழை நீர் தேங்கி நிற்கின்றது பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்து தான் செல்லவேண்டும்.

  பள்ளி வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் தண்டவாளத்தை கடந்து தான் பிள்ளைகளை பள்ளிக்கு ஆட்டோ மூலம் அனுப்பவேண்டிய நிலையில் உள்ளது.

  சுரங்க பாதையில் தேங்கி நிற்கும் மழை நீரை மின் மோட்டார் மூலம் அப்பரப்புறப்படுத்தினாலும் சில மணி நேரங்களில் சுவற்றின் பக்கவாட்டில் ஊற்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி மீண்டும் தண்ணீர் நிரம்பி விடுகின்றது அருகாமையால் நீர் நிலைகள் உயர்ந்துள்ளது ஆதலால் பக்கவாட்டில் உள்ள சுவர்களின்ராஅங்கங்கே தண்ணீர் உற்று பொங்கி வருகின்றது.

  சம்மந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் இந்த ஊற்று தண்ணிரை நிறுத்த வழிவகை செய்து நிரந்தரமான தீர்வு காணவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

 இதனால் பள்ளிச்சிறார்களின் ஆபத்தான பயண நிலை மாறும்.