தனிமையில் இருந்த பெண் மர்ம மரணம்! கொலையா? போலீஸ் டீம் விசாரணை!

தனிமையில் இருந்த பெண் மர்ம மரணம்! கொலையா? போலீஸ் டீம் விசாரணை!

 ஜி.கே.சேகரன்,

  பொன்னன் வட்டம் பகுதியில் வீட்டினுள் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு! போலீசார் விசாரணை.

  திருப்பத்தூர் மாவட்டம், சந்திரபுரம் அடுத்த பொன்னன் வட்டம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் சிவா. இவர் 10 வருடங்களுக்கு முன்பு சந்தியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

  இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிவா தனது மனைவியை தனியாக வீட்டில் விட்டு பெங்களூருக்கு வேலைக்கு சென்றுவிட்டதால், சந்தியா தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.

  இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மகளிர் குழு நடத்தி வரும் மாது என்பவர் சந்தியாவிடம் லோன் பணம் வாங்க வீட்டிற்கு வந்துள்ளார்.

 அப்போது வீட்டில் நுழைந்து பார்த்தபோது கட்டிலில் சந்தியா பிணமாக கிடைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாது கத்தி கூச்சலிட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  பின்னர் விரைந்து வந்த போலீசார் சந்தியாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

   தனியாக வீட்டிலிருந்த சந்தியா எவ்வாறு உயிரிழந்தார்  எவரேனும் கொலை செய்தார்களா  அல்லது தற்கொலையா மேலும் சந்தியாவின் உடலில் எந்த ஒரு காயங்கள் இல்லாமல் இருப்பது போலீசார் மத்தியில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

  மேலும் இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  சம்பவ இடத்தில் வாணியம்பாடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீசார் துருவி துருவி விசாரித்தனர்.  

  வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.