சிறுத்தைகள் அட்டகாசம்! பேர்ணாம்பட்டு விவசாயிகள் பரிதாபம்!

சிறுத்தைகள் அட்டகாசம்! பேர்ணாம்பட்டு விவசாயிகள் பரிதாபம்!

கு.அசோக்,

 பேரணாம்பட்டு அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை மரம் வாழை மரங்கள் மற்றும் துவறை செடிகள் சேதம் - விவசாயிகள் வேதனை.

 வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கோட்டையூர் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.இந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் வனப்பகுதியை ஒட்டியே உள்ளதால்  யானைகள் சிறுத்தைகள் மற்றும் காட்டுப்பன்றிகளால் அவ்வப்போது விவசாய நிலங்கள் சேதம் அடைந்து வருகின்றன.

 இதனை தொடர்ந்து அந்த கிராமத்தில் உள்ள சீனிவாசன் என்பவருடைய விவசாய நிலங்களில் புகுந்த காட்டு யானைகள் தென்னை மரம், வாழைமரம் மற்றும் துவரைச் செடிகளையும், மேலும் அதே பகுதியில் முனியம்மாள் என்பவருடைய விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் தீவனப் பயிர்கள் கல் கம்பங்கள் மற்றும் பைப்புகளை சேதப்படுத்தி உள்ளது.

   பலமுறை காட்டு விலங்குகளால் விவசாய நிலங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.  ஆனாலும் இதுவரை அரசு   இழப்பீடு ஏதும் கொடுக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் நிலங்களில் சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மேலும்

வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க வேண்டும் எனவும் விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.