காவிரி நீர் எங்களை நனைத்து விட்டாள்! சமூக ஆர்வலர் மகிழ்ச்சி!

ம.பா.கெஜராஜ்,
மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் கல்லணை கால்வாய் வழியாக வரக்கூடிய தண்ணீர் இன்னும் கடைமடைக்கு வந்து சேரவில்லை என்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருதாயுதக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் துரை குணா வருத்தப்பட்டிருந்தார்.
அதை அப்படியே மனுவாக தயாரித்து அதிகாரிகளின் பார்வைக்கும் கொண்டு சென்றார்.
குறிப்பாக, கல்லணை கால்வாய் கோட்ட பொறியாளர்கள் மற்றும் இரண்டு மாவட்ட ஆட்சியர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் துரை குணாவின் கோரிக்கை ஏற்கப்பட்டு கால்வாயில் தண்ணீர் வரத் தொடங்கிவிட்டது.
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஓடி வந்த காவிரி நீர் என்று துரை குணா மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.
அதில் இன்று ஊடக பத்திரிக்கை நண்பர்கள் உதவியோடும் அதிகாரிகள் ஒத்துழைப்போடும் காவிரி எங்கள் பெரு நிலத்தை நனைத்து விட்டாள்.
நான் செய்த பணிகளிலே மிகவும் மகிழ்ச்சி தரும் பணியாக இது அமைந்திருக்கிறது நன்றி என குறிப்பிட்டிருக்கிறார்.
முழு செய்தியை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.https://livelook.in/KaveriwaterthatdoesnotreachKadakodieveninDurwariOfficialsplease