பப்பாளிப் பால் கொடுத்து கொல்லப்பட்ட பெண் குழந்தை! பெற்றோர் உறவினர் கைது!

ஜி.கே.சேகரன்,
பிறந்த 9 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்த தாய் தந்தை மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த உமாபதி என்ற உறவினர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த பொம்மன்குட்டை கிராமத்தை சேர்ந்த சேட்டு மற்றும் அவரது மனைவி டயானா ஆகியோருக்கு கடந்த 9 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிரந்தது.
ஆண் குழந்தையை எதிர்பார்த்த அந்த குடும்பத்தினர் இந்த பெண் சிசுவை அழிக்க திட்டமிட்டனர்.
இந்நிலையில், அந்த குழந்தைக்கு பப்பாளிகாயின் பால் கொடுத்து கொலை செய்து புதைத்து விட்டு தலைமறைவானார்கள்.
தகவல் அறிந்த போலீசார் தம்பதியரை தேடி வந்த நிலையில், அவர்கள் பெரிய ஏரி ஊர் பகுதியில் உள்ள உமாபதி என்பர் வீட்டில் பதுங்கி இருந்தது கன்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் குழந்தையின் தந்தை சேட்டு மற்றும் தாய் டயானா மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த உமாபதியையும் கைது செய்தனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட குழந்தையின் தந்தை சேட்டுவின் தாயார் பேபியையும் கைது செய்தனர்.
வளர்ச்சியடைந்த இந்தக் காலக்கட்ட்டத்தில் பகுதியில் பப்பாளி பால் கொடுத்து பச்சிளம் பெண் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.