டூ வீலருடன் பிடிபட்ட பாண்டி சாராயம்!  காவல் நிலையத்தில் எஸ்.பி.ஆய்வு!

டூ வீலருடன் பிடிபட்ட பாண்டி சாராயம்!  காவல் நிலையத்தில் எஸ்.பி.ஆய்வு!

 கே.ஏ.ஜெகதீஸ்வரி,

  நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கள்ளச்சாராய விற்பனை குற்றத்தில் ஈடுபட்ட 13 நபர்கள் கைதுசுமார் 678 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது,

 நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங், இ.கா.பஉத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த  தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  அதன் ஒரு பகுதியாக கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், வெளிப்பாளையம், கீழையூர், கீழ்வேளூர், வேதாரணியம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ,நாகப்பட்டினம் நகர காவல் நிலையம், திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிய ஆகிய காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராய விற்பனை குற்றத்தில் ஈடுபட்ட 13 நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.  

   மேலும் அவர்களிடமிருந்து  678 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

 இது போன்ற கள்ள சாராய விற்பனை மற்றும் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கை பிறப்பித்துள்ளார்கள்.

 காவல் நிலையத்தில் எஸ்.பி.ஆய்வு,

 மேலும், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கீழையூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்கள்.

காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு தற்சமயம் புலன் விசாரணையில் உள்ள முக்கிய வழக்குகளை ஆய்வு செய்தார்கள்.

 எதிரிகள் கைதுசெய்யப்படாமல் உள்ள வழக்குகளில், உடனடியாக எதிரிகளை கைது செய்ய அறிவுரைகள் வழங்கினார்கள். கோப்புக்கு எடுக்கப்படாமல் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து, நீதிமன்றத்திற்கு சென்று சம்மந்தப்பட்டவர்களை சந்தித்து, வழக்குகளை உடனடியாக கோப்புக்கு எடுக்க காவல் ஆய்வாளருக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.

 மேலும் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை ஆய்வு மேற்கொண்டு நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளில் எதிரிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, நீதிமன்ற விசாரணையை விரைத்து முடிக்க கீழையூர் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.

  காலையிலும், மலையிலும் பகல் நேர ரோந்து அனுப்பி, கூட்டம் உள்ள இடங்களில் ரோந்து காவலர்கள் சென்று சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதிக அளவில் இரவு ரோந்து அனுப்ப வேண்டும் எனவும் இரவு ரோந்து செல்லும் காவலர்கள், கொள்ளை போன்ற எந்த சட்ட விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புடன் இருக்குமாறு அறிவுரைகள் வழங்கினார்கள்.