ஸ்பாவில் விபச்சாரம்! இரண்டு நாட்களில் 10 பேர் மீது குண்டாஸ்! தென்காசி அதிரடி!

ஸ்பாவில் விபச்சாரம்! இரண்டு நாட்களில் 10 பேர் மீது குண்டாஸ்! தென்காசி அதிரடி!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,

தென்காசி மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 10 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய கொலை வழக்கின் இரண்டு  குற்றவாளிகள் மற்றும் ஊத்துமலை காவல் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேர் உட்பட ஆறு நபர்கள் நேற்று முன் தினம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

 இந்நிலையில், நேற்று தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்துக்கல் வலசையில் கடந்த 06.06.24 அன்று நடைபெற்ற கொலை முயற்சி வழக்கின் குற்றவாளிகளான குத்துக்கல் வலசை பெருமாள் சாமி என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் (27), வேதம் புதூர் கிழக்கு தெருவை சேர்ந்த லியாக்கத் அலி என்பவரின் மகன் அஜ்மல் அலி (24), குத்துக்கல்வலசை அழகு முத்து நகர் 1வது தெருவை சேர்ந்த பால்சாமி என்பவரின் மகன் குமார் (28) மற்றும் நேருஜி தெருவை சேர்ந்த ராமசுப்பையா என்பவரின் மகன் ரமேஷ் குமார் (23) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

  தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் BE.,MBA அவர்கள் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி நான்கு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆக மொத்தம் இரண்டு நாட்களில் 10 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது.

ஸ்பாவில் விபச்சாரம்!

அதே போல்,  குற்றாலத்தில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய மூன்று பேர் கைது

   குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள ஸிநிஙி ரிசாட்டில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  உடனே குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன் பேரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் நந்தகுமார் (24), கோட்டையம் ராஜப்பன் என்பவரின் மகன் அகில் (28) மற்றும் ஆலப்புழா முரளி என்பவரின் மகன் ஆனந்த் (28) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.