நல்ல தலைவர்கள் இல்லை:- மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் விஜய் ஹாட் ஸ்பீச்! த்ரிஷாவின் பதிவும் காரணமா?

நல்ல தலைவர்கள் இல்லை:- மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் விஜய் ஹாட் ஸ்பீச்! த்ரிஷாவின் பதிவும் காரணமா?

ம.பா.கெஜராஜ்,   

  நடிகர் விஜயின் தவெக சார்பில் நடைபெறும் 2-ம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக வருகை வந்த நடிகரும், தவெக தலைவருமான விஜய், விழாவில் மாணவர்களுடன் அமர்ந்து உற்சாகத்துடன் கலந்துரையாடினார். பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், "உங்களுக்கு ஒரு சின்ன அறிவுரை. அது நண்பர்கள் மற்றும் நட்பு தொடர்பானது.

  மாணவர்கள் டாகடர்கள் ஆகனும் இன்ஜினியர்கள் ஆகனும் என்றெல்லாம் ஆசைப்படுகிறீர்கள். நீங்கள் தலைவராக ஆசைபட வேண்டும். இங்கு நல்ல தலைவர்கள் இல்லை. நான் அரசியல் தலைவர்களை சொல்லவில்லை. நீங்கள் சார்ந்த துறையின் தலைவரை சொல்கிறேன்.

  தினமும் செய்திதாளை படிங்கள். ஒரே செய்திய ஒரு செய்தி பத்திரிகை ஒரு மாதிரியும்,  மற்றொரு செய்தி பத்திரிகை வேறு மாதிரியும் எழுதுவாங்க. இங்க செய்தி வேற கருத்து வேற என்பது உங்களுக்கு தெரியவரும்.

  சமூக ஊடங்களில் நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் காட்டுகிறது. இதை எல்லாம் பார்த்து எது உண்மை, எது பொய் என்பதை மட்டும் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். அப்போதான் உண்மையிலேயே நாட்டில் என்ன பிரச்சனை, நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சனை, சமூக தீமைகள் பற்றி தெரியவரும்.

  அது தெரிந்தாலே ஒரு சில அரசியல் கட்சிகள் செய்கிற பொய்யான பிரச்சாரங்களை நம்பாமல், எது சரி, எது பொய் என்று ஆராய்ந்து பார்த்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கக் கூடிய விசாலமான உலக பார்வை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும்.

 ஒருகட்டத்துக்கு பிறகு பெற்றோர்களை விட நண்பர்கள் உடன் அதிகமான நேரம் செலவிடும் சூழல் ஏற்படும். அதனால் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள். நட்பு என்பது அதுவாக அமைவது, நாம் எப்படி தேர்ந்தெடுக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். அது ஒருவிதத்தில் சரி தான்.

எனினும், உங்களின் நட்பு வட்டாரத்தில் சிலர் தவறான பழக்கங்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்றால், முடிந்தால் அவர்களை நல்வழிப்படுத்தப் பாருங்கள். மாறாக நீங்கள் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடாதீர்கள். உங்களுடைய அடையாளத்தை எக்காரணத்தை கொண்டும் இழந்துவிடாதீர்கள்.

   இதனை நான் ஏன் இவ்வளவு வலியுறுத்தி சொல்கிறேன் என்றால், சமீபகாலத்தில் தமிழகத்தில் போதைப்பொருட்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் மிக அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் இயக்கத்துக்கு தலைவர் என்ற முறையிலும் எனக்கே இது மிக அச்சமாக உள்ளது.

 'போதைப்பொருளை கட்டுக்குள் கொண்டுவருவது அரசின் கடமை. இப்போது ஆளும் அரசு அதலெல்லாம் தவறவிட்டு விட்டார்கள்' என்பதை நான் சொல்லவரவில்லை. அதற்கான மேடையும் இது இல்லை.

அரசாங்கத்தை விட நமது வாழ்க்கையை, பாதுகாப்பை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும்.

 உங்களது சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு அதனை எப்போதும் வளர்த்துக் கொள்ளுங்கள். say no to drugs என்கிற இந்த உறுதிமொழியை எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேர்வில் மதிப்பெண் எடுக்க முடியாதவர்கள் சோர்ந்து போக வேண்டாம். வெற்றி முடிவு அல்ல, தோல்வி தொடர்கதை அல்ல. இதனை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்." என்று சுருக்கமாகவும் நச்சென்றும் பேசினார்.

த்ரிஷா பகிர்ந்ததின் பாதிப்பா?

  கடந்த 22 -ம் தேதி விஜயின் பிறந்த தினத்தன்று த்ரிஷா வெளியிட்ட வாழ்த்தின் தன்மையை சமூக ஊடகங்கள் அவரவர் கற்பனைகளுக்கு ஏற்றவாறு பகிர்ந்தனர். விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அப்போது சமூக வலைத்தள விமர்சனங்களுக்கு இருவருமே பதிலளிக்கவில்லை.

 அப்படியிருக்க இன்று (வெள்ளிக்கிழமை) மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் சமூக ஊடகங்களை மையப்படுத்தி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.  த்ரிஷாவின் புகைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக விஜய் பேசினார் என்றே அவரது பேச்சு  அமைந்திருக்கிறது.