நம் மாவட்ட அமைச்சர் பாலாறு விவகாரத்தில் கவனம் செலுத்தி தடுத்து நிறுத்துவார்! ஆட்சியர் பேச்சு!

நம் மாவட்ட அமைச்சர் பாலாறு விவகாரத்தில் கவனம் செலுத்தி தடுத்து நிறுத்துவார்! ஆட்சியர் பேச்சு!

 ஜி.கே.சேகரன்,

  பாலாற்றின் குறுக்கே  ஆந்திர அரசு மேலும் தடுப்பணைகளை கட்டுவதை தமிழக அரசு தடுத்த நிறுத்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை - விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் பெரும்பாலான அதிகாரிகள் கலந்துகொள்ளவில்லை வருங்காலங்களில் அதிகாரிகள் கலந்துகொள்ளவும் வராத அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி கூட்டத்திற்கு வர சொன்ன மாவட்ட ஆட்சியர். நம் மாவட்ட அமைச்சர் பாலாறு விவகாரத்தில் கவனம் செலுத்தி தடுத்து நிறுத்துவார்.

 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகள் அரசு அதிகாரிகள் சிலர் கலந்துகொண்டனர். 

  கடந்த கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பல துறை அதிகாரிகள் பதில் அனுப்பவில்லை, மேலும் பல துறை அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வரவில்லை, இதனால் மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் கூட்டத்தில் எழுப்பபடும் வினாக்களுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிக்க வேண்டும் அடுத்த கூட்டத்தில் இருந்தாவது விவசாயிகள் கூட்டத்தில் எல்லா அதிகாரிகள் பங்கேற்க வேண்டும்.

  தற்போது வராதவர்களை கைபேசி மூலம் அழைத்து கூட்டத்தில் கலந்துகொள்ள செய்யுமாறு உத்தர¢விட்டார்.  ¢

 இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில்,  ஆந்திர அரசு ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகளை கட்டி முடித்துவிட்டது. தற்போது 500 கோடிக்கு மேலாக நிதி ஒதுக்கீடு செய்து 2 தடுப்பணைகளை புதியதாக கட்டவுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

  இந்த தடுப்பணைகள் கட்டப்பட்டால் பாலாறு பாலைவனமாகும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு தடுப்பணையை கட்டும் பணியை தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தீர்மானமாக நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும்.

  தமிழக விவசாயிகளின் உரிமைகளை விட்டுகொடுக்க கூடாது என பேசினார்கள்.

 மேலும் பாலாறு மற்றும் அகரம் ஆறு போன்ற இடங்களில் பெரிய பெரிய பச்சை மரங்கள் வெட்டி அரசு அனுமதியின்றி கடத்தபடுவது தடுக்கப்பட வேண்டும் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் விவசாயிகள் விவசாயத்திற்காக வண்டல் மண் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்.

 இம்மாவட்டத்தில் மா விளைச்சல் குறைந்துள்ளது அதற்கு இழப்பீடு வழங்கவேண்டும், மாம்பழ தொழிற்சாலையை அரசு துவங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் பேசினார்.   

 பாலாறு விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில், விவசாயிகளின் உரிமைகளை தமிழக அரசு விட்டுகொடுக்காது. நமது மாவட்டத்தை சேர்ந்தவர் நீர் வளத்துறை அமைச்சராக இருக்கிறார்.  அவர் எல்லா ஆறுகளின் விவரங்களையும் முழுமையாக அறிந்தவர். அவர் பாலாறு அணைகட்டும் விவகாரத்தில் கவனம் செலுத்தி தடுத்து நிறுத்துவார்.

பாலாறு விவகாரம் குறித்து விவசாயிகளின் கோரிககையை அரசுக்கு அனுப்பி வைப்போம் என பேசினார்.