பிரியாணி பிரியர்களை காக்க வைத்து ஏமாற்றினர்! போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி!!

ம.பா.கெஜராஜ்.
நேற்று 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வேலூரில் புதிய பிரியாணி கடை ஒன்று திறப்பதாகவும், அன்றைய தினம் ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்றும் ஊர் முழுக்க மெகா சைஸ் பேனர்கள் ஒட்டி பரபரப்பு ஏற்படுகிறது ஒரு நிறுவனம்.
அதன்படி வேலூர் கிரீன் சர்க்கிளில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் உள்ள சர்வீஸ் லைனில் இந்த கடை திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரங்களைப் பார்த்த பிரியாணி பிரியர்கள் பகல் 11 மணிக்கு எல்லாம் அந்த கடை அருகே கூடி விட தனால் ஏகப்பட்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்படி இருக்க பிரியாணி எப்போது விற்பனைக்கு வரும் என்று முன் பணம் செலுத்தி டோக்கன் வாங்கிக் கொண்டு மக்கள் காத்திருந்தனர்.
நேரம் கடக்க கடக்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு கூடிவிட்டனர்.
இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாளர்கள்.
அதை கட்டுப்படுத்த ஒரே ஒரு போலீஸ்காரர் கூட அங்கு இல்லை.
பின்னர் ஒரு வழியாக வாகனத்தில் கொண்டுவரப்பட்ட பிரியாணியை சுமார் 20 பேருக்கு மட்டுமே கொடுத்தனர்.அதன் பின்னர் பிரியாணி காலியாகி விட்டதாக கூறிவிட்டனர். இதனால் பணம் கொடுத்து டோக்கன் வாங்கிய பிரியாணி பிரியர்கள் மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று.
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. சற்று பொறுங்கள் மீண்டும் பிரியாணி வருகிறது என்று அந்த கடை ஊழியர்கள் அங்கு கூடியிருந்த வாடிக்கையாளர்களை மேலும் காக்க வைத்தனர்.
இதே போன்று இரண்டு மூன்று தடவை காக்கவைக்கப்பட்டதால், கொதிப்படைந்த பிரியாணி பிரியர்கள் இந்தாங்க டோக்கன் என்று வீசி எறிந்து விட்டு பணத்தை வாங்கி திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து பிரியாணி பிரியர் ஒருவர் தெரிவிக்கையில் இந்த பிரியாணி கடை சென்னையில் மிகவும் பிரபலம் என்பதால் நம்பி இங்கு வந்தோம்.
ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் இலவசம் என்று ஆசை காட்டுகிறார்கள் தவிர ஒரு சிக்கன் பிரியாணி விலை 250 ரூபாய் என முன் கூட்டி வாங்கிக்கொண்டு டோக்கன் வழங்கினர். வேலூருக்கு இது மிகவும் அதிகமான ரேட் ஆகும்.
வேலூரில் ஆயிரக்கணக்கான பிரியாணி கடைகள் உள்ளன. 100 ரூபாய்க்கு சுவையான பிரியாணியை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி இருக்க ஒரு பிரியாணி இலவசமாக தருவதாக கூறிவிட்டு எங்களிடம் அதற்கான பணத்தையும் பெற்றுக் கொண்டு பல மணி நேரம் காக்க வைத்தது தான் மிச்சம்.
ஆகவே இனி மக்கள் கவர்ச்சி விளம்பரங்களை கண்டு ஏமாறக்கூடாது. அதேபோல் இது போன்ற மாநகர் முழுக்க விளம்பரம் செய்யப்பட்டிருந்த நிலையில் அட்லீஸ்ட் இரண்டு போலீசை அங்கு பாதுகாப்புக்கு நியமத்திருந்தால் போக்குவரத்திற்கு இடையூறு இருந்திருக்காது.
பாவம் இதனால் இரண்டு மணி நேரம் அந்தப் பகுதியில் கடும் எரிச்சல் ஏற்பட்டது என்கிறார் வேதனையுடன்.