கருணாநிதி சிலை திறப்பும்.. வேட்டி சேலை இனாமும்!

க.பாலகுரு,
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலை திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவாரூர் அருகே குன்னியூர் கிராமத்தில் சுரேஷ்குமார் என்பவர் இல்லத்தின் முன்பு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கட்டப்பட்ட மறைந்த திமுக தலைவர் கருணாநிதி திருவுருவ சிலையை ஒன்றிய செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவர் தேவா தலைமையில் மூத்த நிர்வாகி காந்தி திறந்து வைத்தார்.
தொடர்ந்து ஒன்றிய செயலாளர் தேவா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக கழக கொடி ஏற்றியும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது .
பின்னர் ஏழை எளியவர்களுக்கு வேட்டி, சேலைகளை ஒன்றிய பெருந்தலைவர் தேவா வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் செல்வராஜ் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.