ஆசிரியர்களை கவுரவித்த திருவாரூர் ஆட்சியர்!

க.பாலகுரு,
பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுத்தந்த தலைமையாசிரியர்கள் முதல்வர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ சான்றிதழ்களை வழங்கினார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் 2023-2024ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுத்தந்த அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச்சேர்ந்த தலைமையாசிரியர்கள் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு பாராட்டி சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்.
இதில் 10ஆம் வகுப்பில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுத்தந்த 72 தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களும், 535 ஆசிரியர்களுக்கும், அதேபோல் 12ஆம் வகுப்பில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுத்தந்த 32 தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களும், 666 ஆசிரியர்களும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட சுற்றுச்சுழல் மன்றத்தின் சார்பாக பாராட்டு சான்றிதழ் பெற்ற தலைமையாசிரியர்களுக்கும், முதல்வர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் என மொத்தம் 1500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.