முதல்வரின் கோபப் பார்வை? சிக்கிய சில அமைச்சர்கள்!

ம.பா.கெஜராஜ்,
தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில அமைச்சர்கள் மீது முதலமைச்சரின் கோபப் பார்வை படர்ந்ததாகவும், உளவுதுறையின் ரிப்போர்ட்டின்படி இது நடந்ததாகவும் இணைய செய்தி ஒன்று குறிப்பிட்ட்டிருக்கிறது.
மத்தியில் ஆட்சியை கையில் வைத்திருக்கும் பா.ஜ.க.விற்கும், தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக வுக்கும் ஏழாம் பொறுத்தமாக இருப்பதை அறிவோம். கொள்கை ரீதியான முரண்பாடு என்பது இயற்கையாகவே அமைந்திருப்பதால் இந்த எதிர்ப்பு சற்று பலமாகவே உள்ளது.
பெரிய அண்ணாச்சி தனத்தை கையிலெடுத்திருக்கும் மத்திய அரசு அமலாக்கத்துறை சோதனை, கைது என்று தமிழக அமைச்சர்களை குறிவைத்து சம்பவங்களை செய்து வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் பல இன்னல் நடவடிக்கைகள் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், அதை சந்திக்க தயாராகவும் உள்தாக பல மாநில எதிர்கட்சிகள் சவால் விடுகின்றனர். அதில் செய்தியாளர்களிடையே ஸ்டாலின் வெளிப்படையாகவே இந்த சங்கதிகளை ஆணித்தரமாக கூறினார். அதற்கேற்றவாறு தற்போதுதிமுக வழக்கறிஞர் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். விரைவில் அவரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் அவரது மகனும் எம்.பியுமான கௌதம சிகாமனியும் அமலாக்கத்துறை விசாரணையில் சமீபத்தில் ஆஜராகினர். உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டாலும் வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதால் பொன்முடி ரொம்பவே அப்செட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனாலும் அவர் பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆக்டிவாகவே செயல்பட்டார் என்பது தனிக்கதை.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள சில ரிப்போர்ட் அவரை சங்கடத்துக்கு ஆளாக்கியுள்ளதாக சொல்கிறார்கள்.
அமைச்சர்களின் துறை ரீதியான செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது உளவுத்துறையிடம் ரிப்போர்ட் கேட்டுப் பெற்று அதற்கேற்ப சில அறிவுறுத்தல்களை முதல்வர் ஸ்டாலின் வழங்குவார். சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பார். தற்போது அவருக்கு சென்றுள்ள தகவலில் அமைச்சர்கள் ஓரிருவர் எதிர் தரப்போடு ராசியாகி இருப்பதாகவும் அதன் மூலம் சில முக்கிய விஷயங்கள் கசிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்ளுக்குள் இருக்கும் ஈகோ, அதுமட்டுமல்லாமல் தன்னை குறிவைக்க வேண்டாம் என்பதற்காகவும் இப்படியான விஷயங்களில் இறங்கியுள்ளதாக தகவல் வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டதாக சில இணைய செய்திகள் கூறுகின்றன.
அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பாக காட்டமாக பேசியுள்ள ஸ்டாலின் பெயர் குறிப்பிடாமல் அமைச்சர்களை டோஸ் விட்டதாகவும் கூறப்படுகிறது.