டார்க்கெட் டார்ச்சரை, கைவிடு! அஞ்சல் ஊழியர்கள் கோஷம்!

டார்க்கெட் டார்ச்சரை, கைவிடு! அஞ்சல் ஊழியர்கள் கோஷம்!

கு.அசோக்,

ராணிப்பேட்டை மாவட்ட தலைமை தபால் அலுவலக முன்பாக அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மற்றும் தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக 4. ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

  கண்டன போராட்டத்தின் போது அஞ்சல் ஊழியர்கள் தெரிவிக்கையில், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்கி பென்ஷன் உள்ளிட்ட இலாகா ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும்.

  கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைப்படி பணப்பலத்துடன் கூடிய மூன்று கட்ட பதவி உயர்வு 12,24,36, வருட பணிக்கு வழங்க வே ண்டும்,

  180 நாட்கள் சேமிப்பு விடுப்பு, பணிக்கொடை ரூபாய் 5 லட்சம் மற்றும் குரூப் இன்சூரன்ஸ் 5 லட்சம் மருத்துவ காப்பீடு முதலியன வழங்கிட வேண்டும்.

  டார்க்கெட் டார்ச்சரை, கைவிடு, கமிஷன் முறையில் உள்ள ஐ.பி.பி.பீ போன்ற பணியினை வேலை பளுவில் சேர்த்திடு சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் புதிதாக பணியில் சேர்ந்திடும் ஊழியருக்கு இரண்டாம் கட்ட டி,ஆர்.சி ஏ  உடனடியாக வழங்கிடு,

   பகுதி நேர முறையில் பணியாற்றும் வெளியாட்களை காலி பணியிடங்களில் நிரப்பிட வேண்டும் பணியின் போது உயிரிழந்த ஜிஎஸ்டி ஊழியர்களின் வாரிசுகளுக்கு எந்த வித நிபந்தனையுன்றி கருணை அடிப்படையில் பணியை ஆணையை வாங்கிட வேண்டும்,

   கிளை அஞ்சல்களுக்கு லேப்டாப் பிரிண்டர் வழங்கி - இணைய வசதி வழங்கிட வேண்டும் பயிற்சி பட்டறைகளில் கலந்து கொள்ளும் ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு டிஏ உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கிராம அஞ்சலக பணியாளர்கள் பல்வேறு கோஷங்களை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.