அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்ஜகன் தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு!

அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்ஜகன் தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு!

 உ.சசிகுமார்,

 அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி எம்பியாக இருப்பவர் ஜெகத்ரட்சகன். திமுக வைச் சேர்ந்த இவருக்கு 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேலூர் தொகுதியில் சீட்டு கொடுக்கக்கூடும் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது வீட்டில் ஐ.டி.ரெய்டு நடந்து வருகிறது. அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 அதில் சென்னை அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின்  வீடு, அலுவலகங்கள், சொகுசு விடுதிகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

 இதில் தி.நகரில் உள்ள சொகுசு விடுதி, பள்ளிக்கரணையில் உள்ள பல் மருத்துவமனை மற்றும் பல இடங்கள் அடங்கும்.

   பாஜக அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகிய தங்களுக்கு கீழ் உள்ள அமைப்புகள் மூலம் எதிர்கட்சிகளை மிரட்டும் வகையில் செயல்பட்டு வருவதாக நாடு முழுவதும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. டெல்லி, மேற்கு வங்கம், பீகார், தெலங்கானா என பல மாநிலங்களில் மத்திய அரசின் ஏஜென்சிகள் எதிர்கட்சிகளை குறிவைத்து ரெய்டுகளை நடத்திவருகின்றன.

 ஏற்கனவே  பாஜக அரசை எதிர்த்து வரும் திமுக மீது அமலாக்கத்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டு ஆளே பார்ப்பதற்கு கலையிழந்துள்ளார்.

 அதே போல் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமனி தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அவர்களிடமும் விசாரணை மேற்கொண்டது நினைவு கொள்ளத்தக்கதாகும்

  இந்நிலையில் பாஜகவின் பார்வை ஜெகத் பக்கம் திரும்பியிருக்கிறது.