பொங்கல் பரிசு 5,000 ரூபாய் வழங்க அ.தி.மு.க.கோரிக்கை!

ம.பா.கெஜராஜ்,
பொங்கல் பரிசு 5,000 ரூபாய் வழங்க அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்டது. தேர்தல் நேரத்தில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் அன்றாடம் சந்திக்கும் ஏராளமான பிரச்னைகளுக்கும் தீர்வு காணவில்லை.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறிதும் அக்கறை கொள்ளாமல், வாய்ச் சவடால் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதை அ.தி.மு.க., வன்மையாக கண்டிக்கிறது.
இந்த அலட்சிய போக்கை எதிர்த்து போராட, கட்சியின் முழு ஆற்றலையும் பயன்படுத்துவோம் என எச்சரிக்கிறோம்.
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனே குறைக்க வேண்டும்; மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு
உதவிகள் வழங்க வேண்டும்
வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும்; ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் பரிசாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும்
து?ய்மைப் பணியாளர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க வேண்டும்இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில், 9ம் தேதி காலை, மாவட்ட வாரியாக, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.