அந்தரங்க புகைப்படம் வெளிட்டதால் காதல் ஜோடி இறந்தனர்!

ஆர்.செல்வராஜ்,
காதலித்த பெண்ணுடன் அந்தரங்கமாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை பொது வெளியில் வெளியிட்தால் இரண்டு உயிர்கள் பறிபோயின.
கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த கடுத்துருத்தி பகுதியை சேர்ந்தவர் சுருதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அவருக்கு 22 வயது ஆகிறது. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருண் வித்யாதர் (வயது 32) என்பவருக்கும் காதல் ஏற்பட்டதால் பின்ணி பிணைந்த இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார்கள்.
இந்த காட்சிகளை புகைப்படமாகவும் எடுத்துள்ளனர். பின்னர் அருண் வித்யாதரின் நடவடிக்கை சரியில்லாததால் அவருடனான காதலை அந்த சுருதி முறித்து கொண்டார் இது அருண் வித்யாதருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் காதலியை பழிவாங்க திட்டமிட்டு, அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த படங்களை அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.
இதனை பார்த்த அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிகடந்த 2-ந் தேதி அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பெண்ணின் பெற்றோர் கடுத்துருத்தி போலீஸ் நிலையத்தில், தங்களது மகளின் தற்கொலைக்கு அருண் வித்யாதர் தான் காரணம் என தெரிவித்தனர்.
அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இதனை அறிந்த அருண் வித்யாதர் தலைமறைவானார். இந்நிலையில் போலீசாருக்கு பயந்து காசர்கோடு காஞ்சங்காட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெருக்கத்தில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைபடத்தை தவறாக பயன்படுத்தியதால் இரண்டு உயிர்கள் பரிதாபமாக பறி போனது.